தடங்கள்

kavithai ஜூலை 13, 2012

Filed under: Uncategorized — bashakavithaigal @ 3:22 பிப

நான் யாருமில்லை
*******மழைக் காற்றில்
*******மெல்லிய‌ குளிர்
*******த‌கிக்கும் பாலையில்
*******தாங்க‌வொணா தாக‌ம்

நான் நானுமில்லை
******* புனித‌ நூலில்
******* விளித்திருக்கும் சொல்
******* பிர‌ப‌ஞ்ச‌த்தை ஏந்தியிருக்கும்
******* ஒற்றை விர‌ல்

நான் நீயாயிருக்க‌லாம்
*******துய‌ருற்ற‌ உன் தருண‌ங்க‌ளை
*******தாங்கியிருக்கும் உன் த‌னிமை
*******உன் முத‌ல் ப‌சிக்காய்
*******க‌சிந்துதிரும் முலை பால்

 

ithai

Filed under: Uncategorized — bashakavithaigal @ 3:21 பிப

நாமில்லா வீட்டில்
அன‌ண‌த்து கிட‌க்கின்ற‌ன
ந‌ம் த‌லைய‌ணைக‌ள்!kav

 

kavithai

Filed under: Uncategorized — bashakavithaigal @ 3:21 பிப

மீண்டும் வ‌ந்த‌து
அந்த‌ இருள்
த‌வ‌ற‌விட்ட‌ ந‌ம்
முத்த‌ங்களுட‌ன்!

 

kavithai

Filed under: Uncategorized — bashakavithaigal @ 3:20 பிப

எழுதும் வ‌ரிக‌ளிலெல்லாம்
அவ‌ள் செத்துகொண்டிருக்கிறாள்
தீராத‌ தாக‌த்தால்
நிர‌ம்பியிருக்கும் காகித‌த்தில்
க‌டைசி புள்ளியில்
அவ‌ள் உயிர்கொள்ள‌
கூடும்!

 

kavithai

Filed under: Uncategorized — bashakavithaigal @ 3:20 பிப

ப‌ங்கு ச‌ந்தையின்
ஏற்ற‌த்தில் லாப‌ம‌டைந்திருந்தோம்
தேர்த‌ல் முடிவுக‌ளின்
கொண்டாட்ட‌த்தில் அல்ல‌து துக்க‌த்தில்
ஆழ்ந்திருந்தோம்
பட்டு சேலையை ச‌ட்டையாக‌
அணிந்து வ‌ந்த‌ ந‌டிக‌னுக்கு
சூறை காசுக‌ள் வீசியிருந்தோம்
கொத்து குண்டுக‌ளால் ஒரு
குழ‌ந்தை உட‌ல் பிள‌க்க‌ப்ப‌டும்போது

 

kavithai

Filed under: Uncategorized — bashakavithaigal @ 3:19 பிப

மேக‌ங்க‌ள் க‌ட‌லில் க‌விழ்ந்து
என்னை தூக்கி நிலா ம‌றைத்த‌போது
அவ‌ள் துக்கித்திருந்தாள்
பைத்திய‌த்தின் பித‌ற்ற‌லாய்
அவ‌ள் உத‌டுக‌ள்
என் பெய‌ர் அர‌ற்றிகொண்டிருந்த‌ன‌
அவ‌ள் க‌ண்க‌ள் இருளை
இடைவிடாது துடைத்த‌ழித்துகொண்டிருந்த‌து
முத‌ன்முறை ச‌ந்திப்பில்
என்பெய‌ர் விளித்து
நீயா என்ற‌ அவ‌ள் தேட‌லை
தேடியெடுத்து கொண்டிருந்தேன்
வான‌ம் விட்டிற‌ங்கி அவ‌ள்
தோள் தொட்ட‌போது
திரும்பிய‌ அவ‌ள் க‌ண்க‌ளில்
தீப்ப‌ந்த‌ம்
வான‌ம் அதிர்ந்த‌து
ம‌ழை பொழிந்தாள்
“எங்கே போன‌
குப்ப‌ குமிஞ்சு கிட‌க்கு
கொட்டிட்டு வா!”

 

Filed under: Uncategorized — bashakavithaigal @ 3:18 பிப

இர‌க‌சிய‌ங்க‌ள் ம‌றைக்க‌ப்ப‌ட்ட‌
இர‌வில் ஒளிந்திருக்கின்ற‌ன
உன் முத்த‌ங்க‌ள்
திருட‌ன் நானென‌
தீர்ப்பு ப‌டிக்கிறாய்
விடிய‌லில் என்
க‌ன்ன‌த்தின் த‌ட‌ம் காட்டி!

 

kavithai

Filed under: Uncategorized — bashakavithaigal @ 3:18 பிப

பாலையில் த‌னித்து விட‌ப்ப‌ட்ட‌
வ‌ற‌ண்ட‌ நாட்க‌ளாய்
மாறிப் போன‌து
நீய‌ற்ற‌ பொழுதுக‌ள்

நான்
ம‌ண்ணை தின்று
வெம்மையை த‌ரித்திருக்கிறேன்
நீ
என் வெப்ப‌ நாட்க‌ளின் த‌ட‌த்தை
சுல‌பமாக‌ நீ க‌ட‌ந்துவிடுகிறாய்

பின்
ம‌ழைபொழிந்த‌ மாலையில்
உன் க‌ர‌ம்ப‌ற்றும்
க‌ன‌வு ப‌ள்ள‌த்தாக்கில்
வீழ்ந்து போகிறேன்!

 

kavithai

Filed under: Uncategorized — bashakavithaigal @ 3:17 பிப

நீ ம‌துவாக‌வும்
நான் நீராக‌வும்
அள்ளித் தெளிந்திருந்த‌
இன்றைய‌ உரையாட‌லில்
இர‌வு நனைந்திருந்த‌து!

 

kavithai

Filed under: Uncategorized — bashakavithaigal @ 3:17 பிப

இர‌க‌சிய‌ங்க‌ள் ம‌றைக்க‌ப்ப‌ட்டுள்ள
திற‌க்க‌ப்ப‌டாத‌ அறைக‌ளென‌
உன் க‌ண்க‌ள்
அத‌ன் இடுக்குக‌ளின் வ‌ழி
க‌சிந்து கொண்டிருக்கிற‌து
என‌க்கான‌ க‌ருணை
அத‌ன்பின் வ‌ரும் காத‌ல்
இல்லை
அவ்வாறான‌ தோற்ற‌ பிழைக‌ள்!

உன் க‌ண்க‌ளை
ஊடுருவும் த‌ருண‌ங்க‌ளில்
திற‌க்க‌ப‌டாத‌ அத‌ன்
க‌த‌வுக‌ளின் பின்
சிறை கைதியாகிறேன்
பின்
உத‌டுக‌ள் உச்ச‌ரிப்ப‌வை யாவும்
நோய் முற்றிவ‌னின்
ம‌ர‌ண‌ பித‌ற்ற‌ல்க‌ளே!

உன் க‌ண்க‌ளால்
புன்ன‌கைக்க‌வும்,சிரிக்க‌வும்
க‌ற்று வைத்திருக்கிறாய்
அத் த‌ருண‌ங்க‌ளில்
அதிரும் அத‌ன் க‌த‌வு
என‌க்காய் திற‌ப்ப‌தாய்
க‌ண‌ந்தோறும் காத்திருக்கிறேன்!

அவ்வ‌ப்போது
வெட்க‌ம் சிந்தும்
உன் விழிக‌ள்
அத‌ன் க‌த‌வுக‌ளை
ம‌றைக்கின்ற‌ன‌.
வில‌க்க‌ ம‌ற‌ந்து
வேடிக்கைதான் பார்க்கிறேன்!

கண்க‌ளை க‌ண்க‌ளுக்க‌ப்பால்
க‌ண‌ந்தோறும் கொண்டுசெல்கிறாய்
காத‌லை நான்
காத‌லிலிருந்துதான் தொட‌ங்கியிருக்கிறேன்