தடங்கள்

ப‌ண‌ம்…ப‌ண‌ம் ஏப்ரல் 23, 2008

Filed under: Uncategorized — bashakavithaigal @ 8:20 முப

ச‌மீபத்தில் ம‌ருத்துவ‌ க‌ல்லூரி மாண‌வ‌ர்க‌ள் க‌ட்டாய‌ கிராம‌ சேவையை எதிர்த்து போராட்ட‌ம் ந‌ட‌த்தியிருக்கிறார்க‌ள்.ம‌ருத்துவ‌ மாண‌வ‌ர்க‌ள் உட‌னே காசு பார்க்க‌ துடிக்கிறார்க‌ள் என்ற‌ குற்றச்சாட்டு ஒரு புற‌மும்,ம‌ருத்துவ‌ர்க‌ளை நிய‌ம‌ன‌ம் செய்யாம‌ல் அர‌சு செய்யும் த‌ந்திர‌ம் என்றும் ப‌ர‌ஸ்ப‌ர‌ம் இருபுற‌மும் குற்ற‌ச்சாட்டுக‌ள் முன்வைக்க‌ப்ப‌ட்டுள்ள‌து. உண்மையான‌ கார‌ண‌ங்க‌ளை மாண‌வ‌ர்க‌ளின் மனசாட்சிக்கே விட்டுவிடுவோம்.

காசு சம்பாரிக்க‌ நினைப்ப‌து த‌வ‌றா? க‌ஷ்ட‌ப்ப‌ட்டு ப‌டித்து 99+ % வாங்கி 5 வ‌ருட‌ங்க‌ள் வாழ்க்கையை அட‌கு வைத்து பின் அத‌ன் பிர‌திப‌ல‌னை ப‌ண‌ வ‌டிவில் அனுப‌விக்க‌ நினைப்ப‌து த‌வ‌றா? 21 வய‌தில் மென்பொறியாள‌ர்க‌ள் இல‌ட்ச‌ங்க‌ளில் புர‌ளும்போது 24 வயதாகியும் அர‌சாங்க‌ம் ச‌ம்பாதிக்க‌ விடாம‌ல் முட்டு க‌ட்டை போடுவ‌து ச‌ரியா? 25 இல‌ட்ச‌ம் குடுத்து சீட் வாங்கி அத‌ன் பிற‌கு ப‌ல‌ இல‌ட்ச‌ங்க‌ளை வாரி இறைத்து  ச‌ம்பாதிக்கும் வேளையில் த‌டை போடுவ‌து ச‌ரியா?
கேள்விக‌ள் ……….
கேள்விக‌ள்

இப்ப‌டி கேள்விக‌ள் உண்டென்றால் உங்க‌ளிட‌ம்அடிப்ப‌டையிலேயே த‌வ‌று இருக்கிற‌து. எத‌ற்காக‌ ப‌ல‌ இல‌ட்ச‌ங்க‌ளை வாரி இறைத்தீர்க‌ள்.ச‌ம்பாதிக்க‌ வேண்டிய‌ வெறியில்தானே…..
ச‌ம்பாதிக்க‌ நினைப்ப‌து த‌வ‌ற‌ல்ல‌. நியாய‌மே! அத‌ற்காக‌ தேர்ந்தெடுத்த‌ துறைதான் த‌வ‌று.இந்நாட்டில் ச‌ம்பாதிக்க‌ ஆயிர‌ம் தொழில்க‌ள் இருக்கிற‌து.
சில‌ வேலைக‌ளுக்கு ச‌ம்பாதிப்ப‌தை விட‌ சேவை போன்ற‌ சில‌ கார‌ண‌ங்க‌ள் அதிக‌ முக்கிய‌த்துவ‌ம் வாய்ந்த‌வை . ஆகையால் ப‌ள்ளி மாண‌வ‌ர்க‌ளாய் இருக்கும்போதே தீர்மானியுங்க‌ள். சம்பாதிப்ப‌தே பிரதானமென்றால் ஆசிரிய‌ர் பயிற்சி பள்ளி,ம‌ருத்துவ கல்லூரிக‌ளில் சேராதீர்க‌ள்.அத‌ற்கு ப‌திலாக‌ அந்த‌ காசை க‌ந்துவ‌ட்டிக்கு விட்டு கோடீஸ்வ‌ரானவ‌து எவ்வ‌ள‌வோ மேல்.
கொடுக்கிற‌ சொற்ப‌ காசுக்கு ப‌னியிலே நாள் முழுவ‌தும் நிற்க‌ முடியாது என்று எல்லையில் நிற்கும் இராணுவ‌ வீரர்க‌ள் திரும்ப‌ வ‌ந்து விட்டால் உங்க‌ளால் நிம்ம‌தியாக‌ வீட்டில் தூங்க‌ முடியுமா?? வாங்குற‌ ச‌ம்ப‌ள‌த்துக்கு கூட்ட‌த்துல‌ நெரிப்ப‌ட்டு இவ்வ‌ளவு தூர‌ம் ஊர்வ‌ல‌த்துல‌ நட‌க்க‌ முடியுமா என்று போலீஸ்கார‌ர்க‌ள் நினைத்தால் உங்க‌ளால் உருப்ப‌டியாக‌ ஒரு போராட்ட‌ம்தான் ந‌ட‌த்த‌ முடியுமா????

                “காதற்ற‌ ஊசியும் வாராதுகாண் க‌டை வ‌ழிக்கே”

 

IT-யும் ஆங்கில‌மும் ஏப்ரல் 20, 2008

Filed under: கற்றது கணிப்பொறியிய — bashakavithaigal @ 9:48 பிப

அறிவாளினா ஆங்கில‌ அறிவு இருக்கும்;ஹிந்து,எக்ஸ்பிர‌ஸ் பேப்ப‌ர்க‌ளை அனாய‌ச‌மாக‌ ப‌டிப்பார்க‌ள் என்று ந‌ம் பெரிசுக‌ள் ப‌ல‌ நூற்றாண்டு கால‌மாய் க‌தை க‌ட்டி வ‌ந்துள்ளார்க‌ள். ஆங்கில‌ அறிவு பெற்ற‌வ‌ர‌ல்லாம் அறிவாளியாய் இருக்க‌ வேண்டிய‌ அவ‌சிய‌மில்லை.அறிவாளிக‌ளெல்லாம் ஆங்கில‌ அறிவு பெற்றிருப்பார் என்ப‌தும் க‌ற்பித‌ம்தான்.
மென்பொருள் துறையில் ப‌ல‌ உய‌ர் நிலையில் இருக்கும் த‌லைக‌ள் ‘எச்சிக்குயுட்டெட்’,’டோட்ட‌பேஸ்’ என்று உச்ச‌ரிப்ப‌தை கேட்ட‌துண்டு. அதேபோல் நுனி நாக்கு ஆங்கில‌ம் பேசும் யுவ‌திக‌ளும்,பீட்ட‌ர்‍களும் த‌ட்டு த‌டுமாறி கொடுத்த‌ வேலையை முடிக்காம‌ல் குழ‌ம்பி இருப்ப‌தையும் காண‌ முடியும். பொதுவாக‌ பெரு ந‌க‌ர‌ங்க‌ளில் உள்ள அலுவ‌ல‌க‌ங்க‌ளில் அமெரிக்க‌ ஆங்கில‌ம்தான் அதிக‌ம் பிர‌யோகிக்க‌ப‌டுகிறது.’ஷிட்’,’ஸ்குரூட்’,போன்ற‌ கெட்ட‌ வார்த்தைக‌ளெல்லாம் நாக‌ரிக‌ வார்த்தைக‌ளாகி சாதார‌ண‌ அலுவ‌ல‌க‌ உரையாட‌ல்க‌ளிலே பிர‌யோகிக்க‌ப்ப‌டுகிற‌து. அமெரிக்க‌ ஆங்கில‌ம் என்ப‌து ந‌ம்ம‌ ஊரு த‌ங்கிலீஸ் மாதிரிதான்.
ஆனாலும் மென்பொருள் துறையில் நுழைய‌ அடித்துபோடும் ஆங்கில‌ம் தேவைப‌டாவிட்டாலும் அவ‌சிய‌மான‌ அள‌வு ஆங்கில‌ம் தேவைப‌டுகிற‌து. ந‌ம்ம‌ ஊர்க‌ளில் ப‌ள்ளி ப‌டிப்பு த‌மிழ் வ‌ழியில் முடித்து விட்டு முத‌ல் நாள் க‌ல்லூரியில் ‘க‌பார்கான்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்’ என்று கேட்கும் மாண‌வ‌ர்க‌ள் மிர‌ண்டுதான் போகிறார்க‌ள். மென்பொருள் துறையில் சேர‌ போகிற‌வ‌ர்க‌ள் கல்லூரி கால‌ங்க‌ளிலேயே உங்க‌ளை த‌யார் செய்துகொள்ளுங்க‌ள்.

1) நீங்க‌ள் பிளாட்பார‌ங்க‌ளில் விற்கும் கிளுகிளூப்பு புத்த‌க‌ங்க‌ளை வெறித்த‌னமாக‌ ப‌டிப்ப‌வ‌ராக‌ இருன்தால் அதைவிட‌ கிளுகிளு சமாச்சார‌ங்க‌ள் ஆங்கில‌த்தில் கிடைக்கும். ஒரு அக‌ராதியை வைத்து உங்க‌ளுக்கும் இருக்கும் ஆர்வ‌த்திற்கு ஒரு நாவ‌லை ஒரு நாளில் முடிக்க‌லாம்.இதை த‌விர‌ ந‌ல்ல‌ நாவ‌ல்க‌ள் ப‌டிப்ப‌வ‌ர்க‌ள் அத‌ற்கு இன‌ண‌யான‌ ஆங்கில‌ புத்த‌க‌ங்க‌ளை ப‌டிக்க‌லாம்.உதார‌ண‌ம்                                                                     ராஜேஷ் குமார் ‍ ‍…..  சேஸ்,ஷிட்னி ஷெல்ட‌ன்
சுஜாதா…………..மைக்க‌ல் கிரைட்ட‌ன்,ஐச‌க் அசீமொவ்,ராபின் குக்
புஷ்பா த‌ங்க‌துரை,ராஜேந்திர‌ குமார்……… ஹெரால்ட் ராபின்ஸ்,இர்விங் வால‌ஸ்
ர‌ம‌ணி ச‌ந்திர‌ன்,ல‌ஷ்மி……மில்ஸ் அன்ட் பூன்,டானிய‌ல் ஸ்டீல்
பால‌குமார‌ன்…..பால் காஹெலொ,அய‌ன் ரான்ட

2) பட‌ம் பார்ப்ப‌தில் ஆர்வ‌முள்ள‌வ‌ரானால் உங்க‌ள் விருப்ப‌த்திற்கேற்ப‌ ஆங்கில‌ டிவிடிக‌ள் ச‌ப்டைட்டிலுட‌ன் கிடைக்கும். ஒரு ஹெட்போனை வைத்து ப‌ட‌த்தை பாருங்க‌ள்

3) சாட்டிங் செய்வ‌தில் விருப்ப‌முள்ள‌வ‌ரானால் வெள்ள‌கார‌ புள்ளைக‌ளை வ‌லையில் பிடித்து வ‌லுக்க‌ட்டாய‌மாக‌ ஆங்கில‌த்தில் உரையாடுங்க‌ள்

4)உங்க‌ள் உற்றார் உற‌வின‌ர், ந‌ண்ப‌ர்க‌ள் பெரு நக‌ர‌ங்க‌ளில் வேலை செய்ப‌வ‌ரா? அடிக்க‌டி அங்கு சென்று என்னதான்யா இவ‌ங்கே சொல்றாங்கே என்று ஆராயுங்க‌ள்.

5)சீன் போடுப‌வ‌ரா? உங்க‌ள் வ‌குப்பு தோழிக‌ளிட‌ம் உரையாடும்போது வ‌லுக்க‌ட்டாய‌மாக‌ ஆங்கில‌ வார்த்தைக‌ளை சேர்த்து உப‌யோகியுங்க‌ள் த‌வ‌றாக‌ இருந்தாலும் ப‌ர‌வாயில்லை….அவ‌மான‌மில்லை வாழ்க்கை முழுவ‌தும் அவ‌மான‌படுவ‌தை விட‌ ஒரு இர‌ண்டு நிமிட‌ம் அவ‌மான‌ப‌ட்டால் பாத‌க‌மில்லை.
உங்க‌ள் சூழ் நிலை உங்க‌ளை வெகு எளிதாக‌ ஆங்கில‌ம் பேச‌ வைத்து விடும். ஆனால் உங்களை அந்த‌ நிலையில் கொண்டு வ‌ந்து நிறுத்துவ‌து உங்க‌ள் பொறுப்பு

 

 

 

 

Enjoy maadi! ஏப்ரல் 15, 2008

Filed under: Uncategorized — bashakavithaigal @ 11:04 பிப

 

1

Long back, a person who sacrificed his sleep, forgot his family, forgot his food, forgot laughter were called “Saints”

But now they are called..

“IT professionals”

 

2

An interesting line written at the back of a Biker’s T Shirt:

” If you are able to see this, Please tell me that my galfriend has fallen off”

 

3.

Most Relationships fail not because of the absence of love..

Love is always present..

Its just that,

One loves too much,

and

The other loves too many,

 

4.

Employee: Boss, Now i have got married..! Please increase my salary..!

BOSS: Factory is not responsible for accidents occuring outside the company..!

 

5.

Philosophy of life

At the begining of married life, every gal treats her husband as GOD,

Later on somehow the alphabets got reversed..!

 

6.

What is a Fear?

Fear is the Deep, Wrenching feeling in your stomach When pages of your book still smell new

and

Just few hours left for your exams..!

 

7.

Jus4Fun

Someone has rightly said, “A fool can ask More questions that a wise man cannot answer”

No Wonder why so many of us speechless when lecturers ask question..!

 

8.

Boy: Do you have Cards with sentimental Love quotes?

Shopkeeper: Oh sure..@! How about this card, it says “To the only Girl I ever loved.!”

Boy: Thats good, Give me 12 of them..!

 

9

After reading the form filled by an applicant.. The employer said: ” WE do have an opening for you..!

Applicant: What is it?

Interviewer: Its called the “door..!”

 

10

A Banner cum Sign Board In front of an IT company..

Drive Slowly, Dont kill our Employee…

….. Leave them to us

 

நினைவிழந்தவனாகிறேன் ஏப்ரல் 7, 2008

Filed under: bashakavithaigal — bashakavithaigal @ 3:13 முப

திசைகள் தொலையும்
அடர்ந்த காட்டுக்குள்
உனக்கும் எனக்குமான தேடல்
தினம் தொடர்ந்திருக்கிறது
 நம் தேடல்களின் திசைகளின் முனைகளில்
 நாம் சந்தித்திருப்பதும் –  பின்
தெரிந்தே நம் திசைகள் தொலைப்பதும்
 நம் மேல் திணிக்கப்பட்ட   
விளையாட்டின் விதிகளன்றி வேறில்லை!

 நம் சந்திப்பின் தொடக்கமாய்
 திறக்கும் கதவோடே தொடங்கும்
உன் குறும் புன்னகை – பின்
குறும்பு சிரிப்பாய் விரிவடையும்
தருணங்களோடெ நமக்கான நேரம்
 நிறைவடைந்து விடுகிறது!

அடர்ந்த மௌனங்கள் உறையும்
 நம் அறைகளில் உன் மறைக்கப்பட்ட
கண்ணீர் துளிகளோடே தொடங்கும்
என் புறப்பாடு  -பின்
உன் சாத்தப்பட்ட கதவுகள்  
பின்னால்  கதறலோடு
முடிந்திருக்கும்!

என் விமான உயரங்களிலும் மேல் எழுந்து
என்னை ஆக்கிரமி்த்திருக்கும் உன் நினைவுகள்
கண்டங்கள்,கடல்கள், நிலப்பரப்புகள்
எல்லாவற்றையும் வாரிசுருட்டி
இல்லாமல் கரைத்துவிடுகிறது-பின்
உன் நினைவு பள்ளத்தாக்கிலேயே
 நினைவிழந்தவனாகிறேன்.

 

ஒரு பாமரனின் அமெரிக்க நாட்கள் ஏப்ரல் 5, 2008

Filed under: கற்றது கணிப்பொறியிய — bashakavithaigal @ 9:40 பிப

அப்ரைசல் என்பது மேலாளர் கீழே வேலை பார்ப்பவர்களை மி்ரட்டுவதற்கான ஒரு அஸ்திரமாக பயன்படுவதுபோல வேலை நாட்டு பணி வாய்ப்பு அல்லது ராஜினமா என்ற மி்ரட்டல் பணியாளார்கள் மத்தியிலிருந்து மேலாளர்களுக்கு விடப்படுவதுண்டு.இதற்கு காரணம் மென்பொருள் துறையென்றால் கை நிறைய சம்பளத்துடன் பல நாடுகளையும் போய் சுற்றி பார்க்கும் வாய்ப்பு என்ற ஒரு மாய வலைதான். நீங்கள் மென்பொருள் துறையிலிருந்து வெளி நாடு வாய்ப்பு
கிடைக்காதவறாயிருந்தால் உங்கள் கிராமத்தில் கூட அவன் போனான் இவன் போனான் என்று புள்ளி விவரம் சொல்லி வெறுப்பேற்றுவார்கள்.

வெளி நாடுகளில் வேலை செய்யும் உங்கள் நண்பர்கள் பல இடங்களுக்கும் சென்றதாய் புகைப்படம் காட்டுகிறார்களா.  ” நல்லா எங்ஜாய் பன்றான்யா” என்று வயிறு எரிகிறதா…..?? நல்லா விசாரித்து பாருங்கள் அவர்கள் வருடம் முழுவதும் 24/7 வேலை பார்த்து ஏதோ ஒரு நாள் இரண்டு நாளில் சுற்றி  இந்த படங்களை அனுப்பிருப்பார்கள்.இதையும் நம்பவில்லையென்றால் வந்துதான் பாருங்கள்.
பெற்றோரை பிரிந்த பிள்ளைகளும்
பிள்ளைகளை பிரிந்து பெற்றோரும்
மனைவியை பிரிந்து கணவரும்
கணவரை பிரிந்து மனைவியும்
காதலனை பிரிந்து காதலியும்
இப்படி எத்தனையோ கண்ணீர் காட்சிகளை பார்க்கலாம்.வெளி நாடு வாய்ப்புகளில் சம்பாதிப்பது டாலர்களை மட்டும்தான். இழப்பிற்கு ஒரு பெரிய பட்டியலே உண்டு.

அது தவிர சாப்பாடு இங்கு ஒரு பெரிய பிரச்சனை நம்ம மக்களுக்கு.
உருளை கிழங்கு,கேரட்,முட்டைகோஸ்,சிக்கன் என்று நாம் சாப்பாட்டிற்கு சைடாக சாப்பிடுவதையே சாப்பாடாக தருவார்கள். அப்படியே தப்பி தவறி சோறு கிடைத்தாலும் நாம் சைடாக சாப்பிடும் பதார்த்தங்களின் அளவிலேதான் கிடைக்கும். மி்க பொதுவான உணவு இங்கு
காய்ச்சல் ரொட்டி
டீ கடை வறிக்கி
 நாய் ரொட்டி
உருளைகிழங்கு என்று நாம் சாப்பிடுவதையே பர்க்கர்  என்ற வெவ்வேறு அளவுகளில் தருவார்கள்.

ம்ம்ம்ம் என்னத்த சொல்றது
எட்டு திக்குகளும் செல்வீர்
கிட்டியதை ஊர் சேர்ப்பீர்
பட்ட துன்பங்களை மறைப்பீர்
‘அமெரிக்காவிலெல்லாம்……………..’
என்று வடிவேல் கதை சொல்வீர்