தடங்கள்

என் சிறைவாச‌ம் மார்ச் 7, 2009

Filed under: கவிதைகள் — bashakavithaigal @ 8:23 பிப

sss2

இன்று
முத‌ல் முறைய‌ல்ல‌
எண்ணிக்கை முடிந்து வ‌ழியும்
ஒரு மாலையில் மீண்டும்
ந‌ட‌த்தி விட்டாய்.
விவாத‌ முடிவில் தொடங்கும்
நீண்ட‌ மௌன‌த்தில்
இற‌ந்து போயிருந்தாய்
நாளை மீண்டுமொருமுறை
உன்னை உயிர்பிப்ப‌தாய்
உன் திசைக‌ள் தேட‌த் துவ‌ங்குவேன்
தொட‌ரும் இந்த‌ விளையாட்டை
தின்று நீ ஜீவித்திருக்கிறாய்
விளையாட்டை விட்டு வில‌கும்
என் தார்மீக‌ உரிமையை
என் பேர‌ன்பு க‌ட‌ல் ஒளிக்க‌
அத‌ன் அடி ஆழ‌த்தில்
தொலைந்தே போகிறேன்