தடங்கள்

சான்றோனாக்க‌ல்……… ஒக்ரோபர் 5, 2008

Filed under: bashakavithaigal — bashakavithaigal @ 8:31 முப

ந‌ல்வினையென்றே
க‌ருப்பையென‌தை க‌ழ‌ற்றி
கை தொடாத‌ தூர‌த்திலிட்ட‌ன‌
ஓராயிர‌ம் கைக‌ள்!
ஒதுக்கிய‌ கைக‌ளின் சிறைக‌ளில்
வ‌ழிந்தோடுகிற‌து என்
விந்து துளியொன்று
அத‌ன் ப‌சித்த‌ழும் குர‌லுக்கு
சுர‌க்கின்ற‌ன என் முலைக‌ள்
பிதுக்கி பிர‌ப‌ஞ்ச‌மெங்கும் தெளிக்கிறேன்
பின்னொரு இர‌யில‌டியில்
வ‌ற்றி காய்கிற‌து முலைக‌ள்
ப‌ய‌ண‌மென‌து துவ‌ங்குகிற‌து
இர‌க‌சிய‌மாய் மிக‌ இர‌க‌சிய‌மாய்
க‌ருப்பையில் வ‌ள‌ரும்
பிண்ட‌த்தின் ப‌சித்த‌ வ‌யிற்றை
நிறைக்கின்ற‌ன‌ என் கைக‌ள்!