நான் பார்த்த புரியாத, விசித்திரமான, குழப்பமான,வினோதமான விஷயங்களை இங்கு பதிவு செய்வது இந்த பகுதியின் நோக்கம்.
விசித்திரம் 1:
சமீபத்தில் சமூகத்தில் நியாயப்படுத்தப்டும் ஓரினச் சேர்க்கைதான் இப்போது என் மண்டையை குடைந்து கொண்டிருக்கும் விசித்திரம்.இயற்கைக்கு அப்பாற்பட்டதுதான் ஆனால் நடைமுறை நிஜங்களை அங்கிகரிக்க வேண்டும் என்று சொல்பவர்கள்
bisexual
homosexual
masochisim
transvestism
incest
voyurism
animal sex
என்று காமத்தின் பிற மன பிறழ்வுகளை நடைமுறை நிஜம் என்று ஏற்றுகொள்வார்களா??? ஏற்கனவே நாட்டில் incest குற்றங்கள் தலையெடுக்க துவங்கி விட்டன. பிற்காலத்தில் அவையும் குற்றமல்ல என்று ஏற்றுகொள்ளப்படுமா?
பெற்றோர்களால் பார்த்து வைக்கும் திருமணங்களே பெரும்பான்மையாய் இருக்கும் நம் சமூகத்தில் ஓரின சேர்க்கையில் விருப்பமுள்ள மகனுக்காக என் பையனுக்கு உங்க பையன பையன்(!!!!!!) பார்க்க வந்திருக்கோம் என்று சொல்லுமளவு பக்குவப்பட்டிருக்கிறார்களா???
இதற்கும் மேல் வேறு ஏதேனும் வரன் தேடும் இணைய தளங்கள் இவர்களையும் ஏற்றுகொள்ளுமோ?
சமூகத்தில் சிறுபான்மையினராய் இருக்கும் ஓரினசெர்க்கையாளர்கள் மற்றுமொரு ஓரின சேர்க்கையாளரை எங்கனம் அடையாளம் காண்பார்.
பெரும்பான்மையாய் இருக்கும் மக்களை ஒரின சேர்க்கையாளர் துன்புறுத்தினால் அதை காப்பாற்ற பொருத்தமான சட்டங்கள் இருக்கின்றனவா?. உதாரணத்துக்கு ஒரு பெண் இன்னொரு பெண்ணை கற்பழித்து விட்டார் என்று உறுதி செய்ய மருத்துவ பரிசோதனைகள்தான் இருக்கிறதா?
இரயிலில் வாலிபர்களை குறி வைத்து மிரட்டி காசி பறிக்கும் திருநங்கைகளை ஒடுக்க சட்டங்கள் இதுவரை இருக்கிறதா என்ன?
இனி நண்பனோடு சேர்ந்து சுற்ற முடியாது தழுவி அன்பை சொல்ல முடியாது. சமூக பார்வை மாறி போயிருக்கும்
என்னுடைய பதிவின் மூலம் உங்கள் வருகை கண்டுணர்ந்தேன். மிகவும் எதிர்பார்த்த பதிவு விஷயங்கள் திறந்ததும் கிடைத்தது மிக்க சந்தோஷம். குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்ததி கண்ணா? ஆனால் உங்கள் புத்திசாலித்தனம் சிறு கூட்டுக்குள். இன்னும் சற்று விரிவாக உள்ளே சென்று இருக்கலாம் திரு நங்கை. பெயரே எத்தனை அழகாக இருக்கிறது? வியந்துள்ளேன். இவர்களின் வாழ்க்கை, உடல் அமைப்பு, படும் பாடுகள், நிணைத்தே பார்க்க முடியாத வேதனைகள் இது குறித்து ஏதும் வாய்ப்பு இருந்தால் பகிர்ந்து கொள்ளுங்கள். இது போலவே இந்த ஓரினச்சேர்க்கை குறித்து. இத்தனை வயது ஆகியும் சிறுகுழந்தை போல் இவர்களைப் பற்றிய விஷயங்கள் அச்சம் தரத்தக்கதாகத் தான் எனக்கு தெரிகின்றது. எனது அறியாமையை தீர்கக வேண்டும் அல்லது அதற்கான விடைகள் உள்ள புத்தகங்கள் கிடைக்க வேண்டும். http://texlords.wordpress.com
குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்ததி கண்ணா? ஆனால் உங்கள் புத்திசாலித்தனம் சிறு கூட்டுக்குள்
நன்றி நண்பரே . இந்த பகுதி(வினோதங்களும் விசித்திரங்களும்) எனக்கு முழுவதும் தெரியாத கேள்விகள் பல உள்ள விஷயங்களை பகிர்ந்துகொள்வதே. ஆகையால் எனது அறிவு சிறு கூட்டுக்குள் இருப்பதில் ஆச்சரியமில்லை:) . அதன் விசாலங்களை அறியும் தாகத்தில் மட்டுமே அவதனிக்கின்றன எனது படைப்புகள்