தடங்கள்

க‌ம்யூட்ட‌ர் கூலிக‌ளே….காசு ப‌த்திர‌ம் நவம்பர் 15, 2008

கோப்பு வகை: கற்றது கணிப்பொறியிய — bashakavithaigal @ 3:39 பிற்பகல்

“ஏம்பா த‌ர‌க‌ரே….செல்ல‌மா வ‌ள‌த்த‌ பொண்ணு க‌ம்யூட்ட‌ர் இஞ்சினிய‌ரெல்லாம் வேண்டாம் ஏதாவ‌து காய்க‌றி விக்கிற‌ வ‌ர‌ன் இருந்தா சொல்லு” என்று எங்கோ ப‌டித்த‌து ந‌கைச்சுவையாய் இருந்தாலும் இதேபோல் ஒன்று நிஜ‌மாய் என‌க்கு ந‌ட‌ந்த‌து. 2001ல்(இதே போல் ஒரு நிலை அமெரிக்காவில் இருந்த‌ கால‌ க‌ட்ட‌த்தில்) பெங்க‌ளூரில் வீடு தேடி அலையும்போது வீட்டு சொந்தக்கார‌ர்க‌ள் க‌ம்யூட்ட‌ர் க‌ம்பெனியா வாட‌கை ஒழுங்கா த‌ருவியா என்று மிர‌ட்டினார்க‌ள்.அத‌ற்கு பிற‌கு வ‌ந்த‌ வ‌ருட‌ங்க‌ளில் இராஜ‌ ம‌ரியாதை கிடைத்தாலும் எப்போனாலும் ச‌ங்குதூவானுங்க‌ என்று கொஞ்ச‌மாவ‌து சேமிக்கும் ப‌ழ‌க்க‌ம் பிற்பாடு ஏற்ப‌ட்ட‌து.அமெரிக்கர்க‌ளுக்கும் இந்திய‌ர்க‌ளுக்கும் முக்கிய‌மான‌ ஒரு வித்தியாச‌ம் அமெரிக்க‌ர்க‌ள் சேமிப்ப‌தில் அவ்வ‌ள‌வாக‌ ந‌ம்பிக்கை இல்லாத‌வ‌ர்க‌ள் இந்திய‌ர்க‌ள் அனாவ‌சிய‌மாய் செல‌வ‌ழிப்ப‌தில் ந‌ம்பிக்கை இல்லாத‌வ‌ர்க‌ள் என்ப‌துதான். 21/22 வ‌ய‌தில் சம்பாதிக்க‌ தொட‌ங்கும் இந்திய‌ த‌லைமுறை அப்ப‌டி ஒன்றும் கெட்டு போன‌தாக‌ தெரிய‌வில்லை.கலாச்சார‌ சீர‌ழிவுக‌ளுக்கு க‌ம்யூட்ட‌ர் ஆசாமிக‌ளை குறை சொல்ப‌வ‌ர்க‌ள் க‌ம்யூட்ட‌ நுழைவ‌த‌ற்கு முன்னால் மெரீனா பீச்சில் புனித‌மான‌ காத‌ல்க‌ள் ம‌ட்டுமே அர‌ங்கேறியிருந்த‌தா என்று சொல்ல‌ வேண்டும். கை நிறைய‌ ச‌ம்ப‌ள‌த்தை பார்த்து ஒரு வ‌ருட‌ம் இர‌ண்டு வ‌ருட‌ம் ஆடுப‌வ‌ர்க‌ள் அத‌ற்கு பின் நிறைய‌ சேமிப்பில் நாட்ட‌ம் காட்டுகிறார்க‌ள் என்ப‌துதான் ந‌டைமுறை உண்மை.க‌ம்யூட்ட‌ர் ப‌ணி என்ப‌து க‌ண‌வ‌ன் ம‌னைவி பந்த‌ம் போல் அல்ல‌. அது இருப‌க்க‌ங்க‌ளிலும் இலாப‌ நோக்கில் ந‌டைபெறும் ஒரு தின‌ச‌ரி அலுவ‌ல். பிராஜ‌க்ட் இல்ல‌ அத‌னால் இந்த‌ வ‌ருட‌ம் ச‌ம்ப‌ள‌ உய‌ர்வு இல்லை என்று இந்த‌ வருட‌ம் நிறுவ‌ன‌ங்கள் நாக்கு துருத்தினாலும், “கைல‌ ப‌த்து ஆ:பர் இருக்கு ச‌ம்ப‌ள‌ம் இர‌ண்டு ம‌ட‌ங்கா உய‌ர்த்த‌ர‌தா இருந்தா பேச்சு வார்த்தைக்கு யோசிக்கிறேன்!” என்று போன‌ வ‌ருட‌ம்வ‌ரை பிலிம் காட்டிய‌தையும் ம‌ற‌க்க‌ கூடாது. உல‌க‌ம‌ய‌மாக்க‌லின் ப‌ல‌ன்க‌ள் ம‌ட்டும் வேண்டும் ந‌ஷ்ட‌ங்கள் வேண்டாம் என்று சொல்வ‌து அறிவுடைமை ஆகாது.
ம‌ழை கால‌த்திற்காய் உணவு சேமிக்கும் எறும்பை போல் எந்த‌ சிக்க‌ல் வ‌ந்தாலும் அடிப்ப‌டை தேவைக‌ள் ஆட்டம் காணாத‌ அள‌வுக்கு அக்க‌வுண்டில் ப‌ண‌ம் இருந்தால்(குறைந்த‌ ப‌ட்ச‌ம் ஒரு வ‌ருட‌ம் தாக்கு பிடிக்க‌) த‌ப்பி பிழைப்போம்.இது த‌விர‌ என‌க்கு தெரிந்த‌ வேறு வழிக‌ள்
1)குர‌ங்காட்ட‌ம் க‌ம்பெனி க‌ம்பெனியா தாவும்போது அந்த‌ர‌த்தில் தொங்கும் பிராவிட‌ண்ட் ப‌ண்டுக‌ளில் போட்ட‌ ப‌ண‌த்தை திரும்ப‌ எடுக்க‌ வ‌ழி முறைக‌ளை யோசிக்க‌லாம்
2) மார்ச் முத‌ல் வார‌த்தில்  யோரோ சொல்லி எவ‌ரோ நீட்டிய‌ ப‌டிவ‌த்தை நிர‌ப்பி வ‌ருமான‌ வ‌ரிக்காக‌ சேமித்த‌ ப‌த்திர‌ங்களை ,சேமிப்புக‌ளை தேடிப் பிடித்து அதில்  கை வைக்கலாம்.
3) வார‌ இறுதி பார்ட்டிக‌ளுக்கு சில‌ ஆயிர‌ங்க‌ளில் செய்யும் ம‌துபான‌ சைட் டிஷ் செல‌வின‌ங்களை நிறுத்தி விட்டு ப‌ற‌க்கும் இர‌யிலில் மெரீனா வ‌ந்து கிரிக்கெட் விளையாடி செல்ல‌லாம்.
4)ஐபோட்,புளுபெர்ரி என்று காத‌லிக்கும்,கேர்ள் பிர‌ண்டுக்கும் காசு செல‌வ‌ழிப்ப‌வ‌ர்க‌ள் “அலைபேசி ஒலியெல்லாம் உன் குரலாக‌….” என்று க‌விதை எழுதி ப‌ழ‌க‌லாம் காத‌லி தெரித்து ஓடினால் காத‌லுக்கு ஒரு இடைவேளை விட்டு சொந்த‌ ஊர்க‌ளுக்கு அவ்வ‌ப்போது சென்று சுற்ற‌த்தையும் ந‌ட்பையும் பார்க்க‌லாம்.
5)தெரு முனைக்கும் ஸ்டைலாக‌ ஆட்டோ என்ற‌ழைப்ப‌வ‌ர்க‌ள் முடிந்த‌ ம‌ட்டும் வாக‌ன‌ங்களை த‌விர்த்து விட்டு ந‌ட‌ந்து நிறைய‌ கொழுப்புருக்க‌லாம்.
6) எத‌ன்பொருட்டு எவ‌ருக்காக‌ என்று தெரியாம‌ல் பொழுதை க‌ழிக்க‌  ஷாப்பிங் மால்களில் ச‌க‌ட்டுமேனிக்கு அள்ளி இறைத்த‌வ‌ர்க‌ள் நிலா வழியும் இரவில் அலை விர‌ல் தொடும் தூர‌த்தில் அமைதியாக‌ அம‌ர்ந்து இய‌ற்கையை இர‌சிக்க‌லாம்
7) இது த‌விர‌ பெரிதாக‌ வீடு,கார் மற்றும் அடிப்ப‌டை தேவைக‌ளுக்கு அப்பாற்ப‌ட்ட‌ விஷ‌ய‌ங்க‌ளை வாங்குவ‌தை த‌விர்க்கலாம்.

 2000,2001 அடி வாங்கிய‌ க‌ணிப்பொறி துறை மாண்டு விட‌வில்லை. வீறிட்டு எழுந்த‌து. க‌ணிப்பொறி துறை இந்தியாவை ஆக்கிர‌மிப்ப‌த‌ற்கு முன்னால் த‌ங்க‌த்தை அட‌கு வைத்த‌ தேச‌ம் ப‌த்து வ‌ருட‌ங்க‌ளுக்கு பிற‌கு கேத்ரீனா புய‌ல் அமெரிக்காவை தாக்கிய‌ போது பெரும் நிவார‌ண‌ம் டால‌ர் தேச‌த்திற்கே வ‌ழ‌ங்கும் அள‌வுக்கு உய‌ர்ந்து நின்ற‌து.
இர‌வுக்கு பின்னால் எப்போதும் ஒரு ப‌க‌ல் உண்டு க‌ண்ணை இறுக்க‌ மூடி இருள் என்று கூவினாலும்!!!!

 

கோல‌ம் நவம்பர் 8, 2008

கோப்பு வகை: Uncategorized — bashakavithaigal @ 11:22 மு.பகல்

இன்னும் சில‌ நொடிக‌ளோ,
நிமிட‌ங்க‌ளோ,நாட்க‌ளோ
விமான‌ ப‌ய‌ண‌த்தில் இருக்கும் ம‌க‌னுக்கோ
ப‌ள்ளி இறுதியாண்டு தேர்வு எழுதும் பேத்திக்கோ
இறுக்கி பிடித்து வைத்திருக்கும் உயிர்
செய‌ற்கை சுவாச‌ க‌ருவியினோடே
க‌சிந்துகொண்டிருக்கிற‌து….
வெறித்த‌ ஜ‌ன்ன‌ல் வ‌ழி பார்வையில்
நேற்று யாரோ இட்ட‌ க‌ல‌ர் கோல‌ம்
காற்றில் சிறிது சிறிதாக‌
க‌லைந்துகொண்டிருக்கிற‌து!

 

ம‌ச்சான் ஊரு ம‌துரை! நவம்பர் 8, 2008

கோப்பு வகை: ந‌க‌ர‌ங்க‌ள் — bashakavithaigal @ 10:48 மு.பகல்

இந்த‌ ப‌குதியின் நோக்க‌ம் ந‌க‌ர‌ங்க‌ளை அத‌ன் பிர‌மாண்ட‌ங்க‌ளை விள‌க்குவ‌த‌ல்ல‌.என் பார்வையில் விரியும் அத‌ன் திசைகளையும் அத் திசைக‌ளில் ந‌ட‌ந்த‌ என் கால் த‌ட‌ங்க‌ளையும் ப‌திவு செய்வ‌தே இத‌ன் நோக்க‌மாக‌ இருக்குமோ??

க‌ல் தோன்றி ம‌ண் தோன்றா கால‌த்துக்கு முன் தோன்றிய‌ முத‌ல் மெட்ரோ சிட்டி என்று அழைக்க‌லாமா? நான் இங்கு பிற‌ந்த‌தால் அப்ப‌டித்தான் அழைக்க‌ப்பட‌ வேண்டும்.செயிண்ட்மேரீஸ் ப‌ள்ளியின் பின்புற‌முள்ள‌ ச‌ர்ச்சுக்கு சொந்த‌மான‌  வ‌ரிசை வீடுக‌ளில் இருக்கும் ஒரு வீட்டில் என் பாட்டியின் இராஜாங்க‌ம் ந‌ட‌ந்து வ‌ந்த‌து. க‌லெக்ட‌ர் ஆபிசில் குமாஸ்தாவாக‌ வேலை பார்த்து
ஆனை மேய்ச்ச‌ ப‌ர‌ம்ப‌ரையாக்கும்(!) என‌ ப‌ழ‌ம்பெருமைக‌ள் பேசி மோதிர‌ம் விற்று மீன் வாங்கி ச‌மைக்கும் ஒரு சூழ் நிலையில் ஒரு கூட்டு குடும்ப‌த்தில் என் வ‌ள‌ர்ப்பு ந‌ட‌ந்த‌து. ஏதொ ஒரு பெரிய‌ம்மா வீட்டில் உண்டு மாமா வீட்டில் மாலை பொழுதை போக்கி ,இன்னொரு பெரிய‌ம்மா வீட்டில் உற‌ங்கி வ‌ள‌ர்ந்த‌ வ‌ள்ர்ப்பாத‌லால் அமெரிக்காவில் மிக‌ கொடுமையாக‌ த‌னிமையை உண‌ர்ந்திருப்பேன் என்ற‌ முடிவுக்கு வ‌ர‌ வேண்டிய‌தாயிருக்கிற‌து.சுருங்க‌ கூறின் நிறைய‌ அன்பால் நான் த‌ழும்ப‌ த‌ழும்ப‌ நிறைக்க‌ப்ப‌ட்டேன்.

 அன்பு என்ற‌தும் அத‌ன் தொட‌ர்பான‌ காத‌ல் நினைவுக்கு வ‌ருகிற‌து.5 வயதாயிருக்கும்போது இடுப்பில் தூக்கி வைத்துகொண்டு திரியும் வேணியை(அக்கா!!!!!) இன்னும் நினைவு இருக்கிற‌து.அத‌ன் பாதிப்போ என்ன‌வோ இடை அமைந்த‌ பெண்களை பார்த்து என்ன‌ தூக்கிக்கோ என்று இரு க‌ர‌ம் நீட்டி
குழ‌ந்தையாய் ஓட‌ தோன்றுகிற‌து.அத‌ன் பிற‌கு ஒவ்வொரு வ‌குப்பு க‌ட‌க்கும்போதும் ஒவ்வொரு காத‌லியும் க‌ட‌ந்து போனாள்.காத‌லினால் மிஞ்சியவை சைக்கிள் க‌ற்றுகொண்ட‌தும்,ம‌துரையின் நிறைய‌ ப‌குதிக‌ளை தெரிந்துகொண்ட‌தும்,காத‌ல் வ‌ழியும் ஒரு சில‌ க‌விதைக‌ளும்.
காத‌லை த‌விர‌ இள‌ம்பிராய‌த்தில் சிமெண்ட் ரோட்டில் ஓணாண் பிடித்து ச‌லித்த‌ பிற‌கு, நாலு ர‌வையில் சேர்த்து வைத்த‌ தீப்பெட்டி ப‌ட‌ங்க‌ளெல்லாம் காலியான‌ பிற‌கு,கிட்டி விளையாடி ம‌ண்டை உடைத்த‌ பிற‌கு, நொண்டி விளையாட்டில் தோழிக‌ளை துர‌த்தி கால் வ‌ழித்த‌ பிற‌கு கிரிக்கெட் அறிமுக‌மாகிய‌து.உப்புக்கு ச‌ப்பாணியாய் தெரு அண்ண‌ன்மார்க‌ளால் தெப்ப‌க்குள‌த்துக்கு அழைத்து செல்ல‌ப்ப‌டுவ‌துண்டு.தெப்ப‌க்குள‌ம் ம‌துரையின் சிட்னி என்று சொல்ல‌லாம்.பேய் அலையும்டா என்று மிர‌ட்டும் வீட்டு பெரிய‌வ‌ர்களை அல‌ட்சிய‌ப்ப‌டுத்தி தெப்ப‌க்குள‌மே க‌தி என்று கிட‌ந்த‌ கால‌ங்க‌ள் அனேக‌ம். சிங்க‌ம் வாயிலிருந்து வ‌ழிந்து த‌ண்ணீர் நிர‌ம்பும்வ‌ரை அங்கு ந‌டைபெறும் கிரிக்கெட் போட்டிக‌ள் மிக‌ புக‌ழ்பெற்ற‌வை. அந்த‌ சீச‌னில் தெப்பகுள‌த்துகு வெளியே அடிக்க‌ப்ப‌டும் சிக்ச‌ர் வ‌ருட‌ம் முழுவ‌தும் பேச‌ப்ப‌டும்.
குட்டிச்சுவ‌ர்.போர் ஒத்திகை போல் அடுத்த‌  நாள் கிரிக்கெட்டிற்கு தேவையான‌ திட்ட‌ங்க‌ள் வ‌குக்க‌ப்ப‌டுமிட‌ம். இந்த‌ குட்டிசுவ‌ர் எங்க‌ள் ப‌குதியில் அமைந்த‌ ப‌ள்ளியையும் சிறுவ‌ர் சீர்த்திருத்த‌ ப‌ள்ளியையும் பிரிப்ப‌தாக‌ இருந்த‌து.அது த‌விர‌ குட்டி சுவ‌ரில் என்னெவெல்லாம் விவாதிக்க‌ப்ப‌டுமோ அவையெல்லாம் அங்கு விவாதிக்க‌ப்ப‌டுவ‌துண்டு. இன்னும் ம‌துரை செல்லும்போது அந்த‌ குட்டி சுவ‌ர் ந‌ண்ப‌ர்களை சந்திக்கும்போது நினைவுக‌ளை ப‌கிர்வ‌துண்டு.

ம‌துரையில் இன்டெர்னெட்,பீஸா,பானிபூரி,தீம் பார்க் வ‌ருவ‌துக்கு முன் சினிமா தியெட்ட‌ர்க‌ளும் மீனாட்சி அம்ம‌ன் கோயிலை ஒட்டிய‌ க‌டை வீதிக‌ளும்,அக்க‌டை வீதிக‌ளில் சிவ‌ப்பு,க‌ருப்பு தாவ‌ணியும் அத‌ற்கு மேட்சாக‌ ரிப்ப‌ன் த‌ரித்து வ‌ரும் இள‌ம் பெண்க‌ளும்,ந‌ள்ளிர‌வு தாண்டிய‌ பிற‌கும் தேனீர் க‌டைக‌ளில் கிடைக்கும் இனிப்பு ப‌ன்னும்தான் பொழுதுபோக்கு. ர‌ஜினி,க‌ம‌ல் பட‌ங்க‌ளை ச‌ட்டை கிழிந்து,க‌ம்பி கிழித்து பார்த்த‌வ‌ர்க‌ள் அந்த‌ வ‌ருட‌ ஹீரோ. நிறைய‌ முறை அப்ப‌டி ஹீரோ ப‌ட்ட‌ங்க‌ள் வாங்கி கொசுறாக‌ த‌ந்தையிட‌ம் அடியும் வாங்கிய‌துண்டு.
முத‌ன்மையாய் இருப்ப‌த‌ன் சுவையை சொல்லி கொடுத்த‌ திருஞான‌ம் ப‌ள்ளியும்,ம‌ர‌ண‌ ப‌ய‌த்தில் திரிந்த‌ கால‌ங்க‌ளில் அர‌வ‌னண‌த்த‌ சௌராஷ்டிர‌ ப‌ள்ளி ந‌ண்ப‌ர்க‌ளும் ஆசிரிய‌ர்க‌ளும்,அறிவு தாக‌த்தை இடைவிடாது என‌க்குள் ஏற்ப‌டுத்திய‌ ம‌துரை க‌ல்லூரியும் அத‌ன் பேராசிரிய‌ர்க‌ளும் என்றென்றும் போற்றுத‌லுக்குரிய‌வ‌ர்க‌ள்.
அத‌ன் பிற‌கு என் கால்க‌ள் பிழைப்ப‌த‌ற்காக‌ ப‌ல‌ ந‌க‌ரங்களை க‌ட‌ந்து விட்ட‌து.
ப‌ல‌ மாநில‌ங்க‌ள்,நாடுக‌ளில் நாடோடியாக‌ வாழ்ந்தாலும் என் ஆன்மா சுக‌ம‌டைவ‌து ம‌துரையில் ம‌ட்டுமே.