அமெரிக்காவில் இது தேர்தல் நேரம். மக்கள் ஒபாமா,மெக்கெயினின் நிறை குறைகளை அலசி யாருக்கு ஓட்டிடுவது என்று மனதளவில் தயாராகிகொண்டிருக்கிறார்கள். நம் நாட்டில் என்ன நடக்கிறது நடந்தது என்று ஒப்பிட்டு பார்த்தால் அதிர்ச்சிதான் காத்திருக்கிறது.
அரசியல்வாதியை விடுங்கள். மக்கள் அவர்களை விட மோசமாக போய்கொண்டிருக்கிறார்களோ என்றுதான் எண்ண தோன்றுகிறது.
அந்த கட்சியில எவ்வளவு தராங்க. இந்த கட்சில அவங்கள் விட நிறைய தராங்க தவிர ஒரு குடம் குத்துவிளக்கு கிடைக்குது என்று பாமரர்கள் மட்டுமல்ல, கவனிக்கவும் சில படித்தவர்களும் நான்கு இலக்க சம்பளம் வாங்குபவர்களும் கூட ஓட்டுக்கு விலை போய்கொண்டிருக்கிறார்கள்.
நம்மட்ட கொள்ளை அடிச்ச காசுதானே என்று விலக்கம் வேறு இதில்.
பணம் தந்து ஓட்டு வாங்க துடிக்கும் அரசியல்வாதிகளை விட பணத்தை பெற்றுகொண்டு ஓட்டு போட துடிக்கும் இவர்களின் அறியாமை மிக மிக ஆபத்தானது.
500 ரூபாயும் பிரியாணியும் ஒரு நாள் வாங்கினால் அடுத்த ஐந்து வருடங்களுக்கு அல்வாதான் என்று இந்த படித்த முட்டாள்களுக்கு கூடவா தெரிவதில்லை.
உங்களுக்காக உழைக்க ஆசைப்படுகிறேன் காசு வாங்கிட்டு பிரியாணி சாப்பிட்டு எனக்கே ஓட்டு போடுங்கோ என்றால் எப்படி நம்புகிறார்கள்.
யாராவது கோழி திங்க கூலி தருவானா??????????
500 ரூபாய் குடுத்து ஓட்டு வாங்குபவர்கள் உங்கள் வரிப்பணத்திலோ அல்லது உங்களுக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய நல்ல ரோடு,குடி நீர் போன்ற அடிப்படை தேவைக்கு ஒதுக்கப்பட்ட நிதியிலிருந்து தலைக்கு ஐயாயிரம் ஆட்டைய போட்டா…………!!!!!!!!!!
ஒரு விஷயத்தில நம்ம மக்கள் நேர்மையானவங்க!!!!!… எந்த கட்சிட்ட பணம் வாங்கறாங்களோ அவங்களுக்கு கரெக்ட்டா ஓட்டு போட்டுறாங்க.பெரும்பாலும் ஏமாற்றுவதில்லை.
முகம்மது பின் துக்ளக் படத்தில் சோ சொல்வது போல்
“மக்கள்!!! மடையர்கள்” என்றுதான் சொல்ல வேண்டியிருக்கிறது