தடங்கள்

இருக்கை ஜனவரி 26, 2008

கோப்பு வகை: bashakavithaigal — bashakavithaigal @ 2:36 மு.பகல்

கருப்பு மழை பெய்யும் இருளில்
கண்ணாடி ஜன்னல் விலக்கி
கரம்,சிரம் புறம் நீட்டி
குழந்தையாய் குதூகலிப்பதில்லை!

கைபிடியழுத்தி சாய்த்துவிட சொல்லி
கைபலகை விலக்கி தோள் உரசி
வெட்கப் புன்னகையொன்றை வீசி
வெடுக்கென முகம் திருப்புவதில்லை!

கைக்குள் கைகோர்த்து
தோள்மேல் தலைசாய்த்து -பின்
தலையெழுப்பி
காதுக்குள் காதலிப்பதாய்
கிசுகிசுவென சொல்வதில்லை!

மரம்சுற்றும் மலை பாம்பாய்
கரமெடுத்து சுற்றி
‘காதலி காதலி…. ‘ என்ற
என் பிதற்றலுக்கு
‘மடியாது(முடியாது)…. ‘ பழகுதமிழில்
கொஞ்சுவதில்லை!

உன் நினைவுகளை மட்டுமே
சுமந்து வந்துகொண்டிருக்கும்
நீயில்லா வெற்று இருக்கையை
ஒரு பேருந்து பயணத்தில்
என்னுடன் எடுத்துபோகிறேன்

 

7 Responses to “இருக்கை”

  1. “உன் நினைவுகளை மட்டுமே
    சுமந்து வந்துகொண்டிருக்கும்
    நீயில்லா வெற்று இருக்கையை
    ஒரு பேருந்து பயணத்தில்
    என்னுடன் எடுத்துபோகிறேன்”

    nice

  2. //உன் நினைவுகளை மட்டுமே
    சுமந்து வந்துகொண்டிருக்கும்
    நீயில்லா வெற்று இருக்கையை
    ஒரு பேருந்து பயணத்தில்
    என்னுடன் எடுத்துபோகிறேன்//

    அருமை. ரசித்துப் படித்தேன்

  3. மிகவும் நன்றாக இருக்க்கிறது நண்பரே.

  4. //அருமை. ரசித்துப் படித்தேன்
    Nandri ravisankar

  5. //மிகவும் நன்றாக இருக்க்கிறது நண்பரே.
    nandri thozare-:)


Leave a Reply