மழைகழுவிய இலையில்
பனித்துளியாக உருக்கொண்டு
மல்லிகைமொட்டின் இதழ்பிரித்து
அதனுள் இறங்கி நின்றாய்
ஒரு தேவதைகுட்டியென
நீ ஜனித்த இந்த நாளில்தான்
என் சந்தோஷ உலகம் சூல்கொண்டது!
சுற்றியெனை வட்டமிட்டு
சுருக்கியென்னுலகை அதனுள்
மணல்வீடுகட்டி குடியேற அழைத்தாய்!
தோளிற்குமேல் வளர்ந்து என்
தோழியானாய் நீ
எனது உணர்வுகளை
உனது உதடுகளால் மட்டும்
சிறப்பாக செதுக்கமுடிந்தது!
பின்னொரு மாலையில் தேம்பலுடன்
காதல்கணவன் கரம்பற்றி கடல்கடந்துசென்றுவிட்டாய்
நீ தண்ணீர் ஊற்றா
வாடிபோன ரோஜா செடிகளுடன் தினம் உன்
வரவை எதிர்பார்த்து பிரிய
மகளே நானும்!