தடங்கள்

காத்திருக்கிறேன் ஏப்ரல் 24, 2007

கோப்பு வகை: bashakavithaigal — bashakavithaigal @ 12:18 பிற்பகல்

உன் தங்கைகளுக்காகவும்
சொப்பனத்திற்கு பிந்திய பின்னிரவுகளில்
உன் உறவுகளை நினைத்து
என் நெஞ்சில்
நீ வடிக்கபோகும் கண்ணீருக்காகவும்
என் காதலை
என் நெஞ்சில் சமாதிவைத்து
மலர்கொத்தும் வைத்துவிட்டேன்!

ஒருவருக்கொருவர் உடன்வர முடியாத
திசைகளின் விளிம்பில்
ஒரு நாள் சந்தித்தோம்
நீ வந்த திசையின்
சாலையிலெல்லாம் நீ
தெளித்த கண்ணீர்.
ஒரு புன்னகையை மட்டும்
உன்னிடமிருந்து வாங்கி
உன்னை உன் திசை
அனுப்பிவிட்டு
கரையான்களாய் அரிக்கும்
உன் நினைவுகளுக்கு
வெற்று வெளியில்
சிதைமூட்டிகொண்டிருக்கிறேன்!

இருந்தாலும்….
உன் ஜானவாசத்தில்
என் ஜன்னலோரம் தாமதிக்கும்
உன் உறவு கூட்டம்
உன்பெயர்கொண்ட கடவுள்
வானொலியில் அடிக்கடி ஒலிக்கும்
உனக்கு பிடித்த பாடல்
நீ விரும்பி கேட்கும் அரிசிமுறுக்கு.
இவையாவும்
உன் நினைவுகளை
எரியும் சிதையிலிருந்து
எடுத்து போடுகிறது!

காதலை காற்றில்
கரைத்து வாழ்க்கை
அங்கிகரித்த அந்தஸ்த்தின்
பரிவட்டத்தை தரித்திருக்கிறாய்
இன்னும் நான்
உன் நினைவுகளுடன் மட்டுமே
போராடி தோல்வியுற்று
ஆயுளை அவசரமாய் கழிக்க
ஆண்டவனிடம் வரம்கேட்டு
நீ வரும் குளக்கரையில்
கல்லெறிந்து காத்திருக்கிறேன்!

 

இறுதி சில நொடிகளில் ஏப்ரல் 23, 2007

கோப்பு வகை: bashakavithaigal — bashakavithaigal @ 5:51 பிற்பகல்

இது
தகப்பனின்,தம்பியின்
கணவனின்,காலச்சுவட்டில்
தன்னை தேய்த்தெடுத்த
கிழவனின் சாவு படுக்கை!

கண்ணோரம் கடிக்கும் எறும்பு
செயல்படா கைகள்
காப்பிகோப்பையுடன் கண்ணீர் மனைவி
உள்ளுக்கும் வெளிக்குமாய் சத்ததுடன்
ஊசலாடும் உயிர்….

அலையலையாய் வந்துபோகும்
அம்மா முகம்
அருகே வாடா என்றழைக்கும்
அப்பா கரம்
காதில் ஒலிக்கும்
எட்டு வயதில் வளர்த்த
சண்டை சேவல் கூவல்
பிறந்துகொண்டிருக்கிறேனா….
இறந்துகொண்டிருக்கிறேனா…
எதுவென்று தெரியாத
ஒரு நிசப்தத்தில்
ஆட்டோவிற்கும் ஆம்புலன்சிற்கும்
வாடகை வித்தியாசம்
விசாரித்துகொண்டிருக்கும் மகன்
ஆயாசமாய் கண்களை மூடி
அடிக்குரலில் கேட்கின்றேன்
‘இறைவா எனது பயணம் தொடங்கட்டும் ‘
—-

 

JOB FAIR ஏப்ரல் 18, 2007

கோப்பு வகை: Freshers heaven — bashakavithaigal @ 12:02 பிற்பகல்

There is a job fair at madurai kamarajar university for freshers/experience people on 28th and 29th.

The venue is muva arangu madurai kamarajar university.

For futher details  check thehindu.com

 

உறவென்றால்… ஏப்ரல் 16, 2007

கோப்பு வகை: bashakavithaigal — bashakavithaigal @ 5:47 பிற்பகல்

துரத்தி வந்தவன் நீ — பின்
தூர போனவன் நீ!
நான்
விழும்முன்னே என்
வலிகொண்டவன் நீ!
கல்லெறிந்து குளத்தில்
என் பிம்பத்தை நெளியவைத்து
என்னை சிரிக்க வைத்தவன் நீ
கைவளையல் உடைத்து
கண்ணீர்விட வைத்தவன் நீ!
எங்கிருந்தாலும்
என் பிறந்தநாள் வாழ்த்து சொல்லி
சிலிர்க்க வைப்பவன் நீ!
கைமருதாணி சிவப்பை
கன்ன சிவப்போடு காட்டி
வெட்கப்பட வைத்தவன் நீ!
வலிகொண்டு கதறும் நேரமெல்லாம்
கோழிகுஞ்சாய் ஒடுங்க
பரந்த மார்பு விரித்தவன் நீ!
என் கவிதை படிக்கவென
என் தாய்மொழி கற்றவன் நீ!
இப்பொழுது எனக்கு மட்டும் சொல்
உறவென்றொரு சொல்லில்
நீ யார்?
நான் யார்?

 

நீயா அவள் ஏப்ரல் 13, 2007

கோப்பு வகை: bashakavithaigal — bashakavithaigal @ 7:57 மு.பகல்

சீண்டலாய் நான்
தீண்டியபோது தாங்காமல்
தலைகவிழ்ந்து கேவினாயே
நீயா அவள் ?

நீயென்னை பார்ப்பதை
நான் பார்த்துவிட்டால்
வான் பார்ப்பாயே
நீயா அவள் ?

உன் கண்களின் ஊடுருவலில்
நான் நிலைதடுமாறி
வார்த்தைகளை தேடிதவிக்கையில்
கீழுதடு கடித்து
கிண்டலாய் சிரிப்பாயே
நீயா அவள் ?

எதார்த்தமாக இதழ்குவித்து
என்னை பார்க்கையில்
என் கன்னம் காட்டியபோது
முகம் சிவந்தாயே
நீயா அவள் ?

காலொடிந்து கட்டிலில்கிடக்க
கண்களில் குளம்கட்டி
உச்சந்தலை கோதி
உள்ளங்கை பற்றினாயே
நீயா அவள் ?

செல்போன் சிணுங்கலும்
தோள்சாய்ந்து காதலனிடம்
தெரிந்தவர் என்ற அறிமுகப்படுத்தலும்
நுனி நாக்கு ஆங்கிலமும்
நூதனமாகத்தான் மாறிவிட்டாய்
ஆறாண்டு இடைவெளியில்
அடுத்த பிறவி எடுத்தாயோ ?

 

இறப்பு ஏப்ரல் 12, 2007

கோப்பு வகை: bashakavithaigal — bashakavithaigal @ 7:38 மு.பகல்

நட்சத்திரங்கள் தொலைந்த
நள்ளிரவு நேரம்
நிலா இல்லாத வானம்
கன்னம் வருடிப்போகும்
தென்னங்காற்று
என் வீட்டு மாடியிலமர்ந்து
நீயில்லா நிமிடங்களை
தீயிட்டுக்கொண்டிருக்கிறேன்

நான்
இருக்கும்போதெயென்னை
இறக்கும் நிலையெய்ய
செய்துவிட்டாய்.
அனிச்சையாக நடக்கும்
உடலின் இயக்கங்கள்
நான் இறந்தவனாகவே
கட்டியம் கூறுகின்றன
இறப்பு துயறமானதுதான்
இருந்தபோதும்
நீ
எடுத்து தந்ததால்
ஏற்றுக்கொள்கிறேன்!

 

Job Fair ஏப்ரல் 11, 2007

கோப்பு வகை: IT — bashakavithaigal @ 1:54 பிற்பகல்

There is a job fair at madurai kamarajaruniversity on apr 28 &29 conducted by leading companies.

Please apply on http://thehindu.com

 

உன்னால் நான் ஏப்ரல் 10, 2007

கோப்பு வகை: bashakavithaigal — bashakavithaigal @ 7:48 மு.பகல்

உன்னோடு உலகத்தில் வாழ்வதால்
உன் சக மனிதனாகிறேன்
உள்ளத்தில் உன்னை இருத்தி
உன் கோவிலாகிறேன்
மண்மேல் உன் தடம்தேடி
உன்னை தொடர்ந்தவனாகிறேன்
மாலையில் உன் பாடல்கேட்டு
உன் இரசிகனாகிறேன்
கோபத்தில் நீ கொதிக்க
சாந்தமாகிறேன்
கொஞ்சும்போது நானுன்
குழந்தையாகிறேன்
அக்கரையாய் நீ பேச
அடிமையாகிறேன்
அடைக்கலம் தேடி நானுன்
அகதியாகிறேன்
நெஞ்சத்தால் நானுன்
உணர்வாகிறேன்
உன் நினைவுகளால்மட்டுமே
நான் கவியாகிறேன்!

 

அலைந்திருக்கும் ஏப்ரல் 6, 2007

கோப்பு வகை: bashakavithaigal — bashakavithaigal @ 9:07 மு.பகல்

கரையும் காகங்கள் அல்ல
உறைந்துபோன உன் நினைவுகள்
உருக்கியெடுத்த உன் கனவுகள்
கலைத்திருக்கும் என் காலை உறக்கத்தை.
இமை பிரித்ததும்
என் கண்முன்னே தெரிவது
உன் புன்னகையொன்றே……
எனவே இனி
எனனெதிரே நீ வராதே!

ஒலிக்கும் தொலைபேசி ஒலியெல்லாம்
உன் குரல் அழைப்பாய்….
எடுத்த உடன் சொல்கிறேன்
உன் பெயரொன்றையே!
ஆதலால் நீ
அழித்துவிடு
எண்ணை….
என்னை….

உன் தோழி
உனக்கு பிடித்த பாடல்
உன் கவிதைகள்
இவையாயும
நான்குபுறம் பிணைந்த சங்கிலிகளாய்
நிஜக்கடலில் நான் நீந்தவிடுவதில்லை
தோழி மாற்று….
பாடல் மற….
கவிதை எரி….
இவையெல்லாம் செய்தேனென்றே
எனக்கொரு கடிதம் எழுது
உன் நினைவுகளை தட்டியெழுப்பாத
கடலில் இருண்ட ஆழத்தில்
கடிதம் புதைக்கிறேன்!

இறுதியாக
உன்னை தீண்டி சிலிர்த்த விரல்கள்,
உன் நெருக்க சுவாசத்தில்
உனக்கும் கேட்க
துடித்த இதயம்,
உன் கண்களில் வழிந்த
வெட்கம் பருகிய என் கண்கள்
உன் ஆடை அணிந்து
உன்னை தழுவியதாய்
தகித்த என் தேகம்
எல்லாவற்றையும் சிதைத்து
என் காதல்
எரித்து விடுகிறேன்!

பின் என்னை நான்
கொலை செய்த குற்றத்திற்காய்
மரண தண்டனையென தீர்பெழுதி
என் கடைசி கவிதை
காற்றில் அலைந்திருக்கும்!

 

தீர்மானிக்கப்படவில்லையெதுவும் ஏப்ரல் 5, 2007

கோப்பு வகை: bashakavithaigal — bashakavithaigal @ 5:51 பிற்பகல்

தீர்மானிக்கப்படவில்லையெதுவும்
தற்செயலாகவே நிகழ்ந்திருக்கவேண்டும்
முந்தும் எந்தை
விந்தணுக்களில் என்
சகதுளிகள் பின்தங்கியதால்
நானென்பது தீர்மானமாயிற்று!

தீராத வினைகள் தொட்டதில்லை
தீயெனை சுடும்விதி எட்டவில்லை
காலமெனது இருப்பை
தன்மேல் தாங்கி வருகிறது!

தரித்திரம் துடைக்க
சரித்திரம் படித்து
அரிதாரம் பூசி
விற்பனை பிரதிநிதியாய்
வீதிதோரம் அலைந்த நாட்களும்
தீர்மானிக்கப்பட்டதல்ல!

பத்து பொருத்தங்கள் பொருந்தி
பித்தனாய் எனை இருத்தி
மத, ஜாதி, உட்பிரிவு, முறையென
ஒன்றிலும் பிறழாமல்
அறியப்படாதவளாயினும்
அவள் விரல் பிணைத்து
அக்கினி வலம் வந்த நிமிடங்களும்
தீர்மானிக்கப்பட்டதல்ல!

அற்பாயுளில் அன்பு மனைவி செல்ல
அமெரிக்க டாலர்களுக்கு
அடிபணிந்தே ஒரு மகனும் பிரிய
சாய்வு நாற்காலியிலமர்ந்தபடி
விட்டம் பார்த்த தனிமையில்
சுவற்று பல்லிக்கு
சொல்லிகொண்டிருக்கும் இந்த
கவிதையும் தீர்மானிக்கப்பட்டதல்ல