தடங்கள்

GAY AND LESBIAN SEX ஜூலை 4, 2009

கோப்பு வகை: வினோத‌ங்க‌ளும் விசித்திர‌ங்க‌ளும் — bashakavithaigal @ 2:48 பிற்பகல்

நான் பார்த்த‌ புரியாத‌, விசித்திர‌மான‌, குழ‌ப்ப‌மான‌,வினோத‌மான‌ விஷ‌ய‌ங்க‌ளை இங்கு ப‌திவு செய்வ‌து இந்த‌ ப‌குதியின் நோக்க‌ம்.

விசித்திர‌ம் 1:
ச‌மீப‌த்தில் சமூக‌த்தில் நியாய‌ப்ப‌டுத்த‌ப்டும் ஓரின‌ச் சேர்க்கைதான் இப்போது என் ம‌ண்டையை குடைந்து கொண்டிருக்கும் விசித்திர‌ம்.இய‌ற்கைக்கு அப்பாற்ப‌ட்ட‌துதான் ஆனால் ந‌டைமுறை நிஜ‌ங்க‌ளை அங்கிக‌ரிக்க‌ வேண்டும் என்று சொல்ப‌வ‌ர்க‌ள்

bisexual

homosexual

masochisim

transvestism

incest

voyurism

animal sex

என்று காம‌த்தின் பிற‌ ம‌ன‌ பிற‌ழ்வுக‌ளை ந‌டைமுறை நிஜ‌ம் என்று ஏற்றுகொள்வார்க‌ளா??? ஏற்க‌ன‌வே நாட்டில் incest குற்ற‌ங்க‌ள் த‌லையெடுக்க‌ துவ‌ங்கி விட்ட‌ன‌. பிற்கால‌த்தில் அவையும் குற்ற‌மல்ல‌ என்று ஏற்றுகொள்ள‌ப்ப‌டுமா?

பெற்றோர்க‌ளால் பார்த்து வைக்கும் திரும‌ண‌ங்க‌ளே பெரும்பான்மையாய் இருக்கும் ந‌ம் ச‌மூக‌த்தில் ஓரின‌ சேர்க்கையில் விருப்ப‌முள்ள‌ ம‌க‌னுக்காக‌ என் பைய‌னுக்கு உங்க‌ பைய‌ன பைய‌ன்(!!!!!!) பார்க்க‌ வ‌ந்திருக்கோம் என்று சொல்லும‌ள‌வு ப‌க்குவ‌ப்ப‌ட்டிருக்கிறார்க‌ளா???

இத‌ற்கும் மேல் வேறு ஏதேனும் வ‌ர‌ன் தேடும் இணைய‌ த‌ள‌ங்க‌ள் இவ‌ர்க‌ளையும் ஏற்றுகொள்ளுமோ?
ச‌மூக‌த்தில் சிறுபான்மையின‌ராய் இருக்கும் ஓரின‌செர்க்கையாள‌ர்க‌ள் ம‌ற்றுமொரு ஓரின‌ சேர்க்கையாள‌ரை எங்க‌ன‌ம் அடையாள‌ம் காண்பார்.

பெரும்பான்மையாய் இருக்கும் ம‌க்க‌ளை ஒரின சேர்க்கையாள‌ர் துன்புறுத்தினால் அதை காப்பாற்ற‌ பொருத்த‌மான‌ ச‌ட்ட‌ங்க‌ள் இருக்கின்ற‌னவா?. உதார‌ண‌த்துக்கு ஒரு பெண் இன்னொரு பெண்ணை க‌ற்ப‌ழித்து விட்டார் என்று உறுதி செய்ய‌ ம‌ருத்துவ‌ ப‌ரிசோத‌னைக‌ள்தான் இருக்கிற‌தா?
இர‌யிலில் வாலிப‌ர்க‌ளை குறி வைத்து மிர‌ட்டி காசி பறிக்கும் திருந‌ங்கைக‌ளை ஒடுக்க‌ ச‌ட்ட‌ங்க‌ள் இதுவ‌ரை இருக்கிற‌தா என்ன‌?

இனி ந‌ண்ப‌னோடு சேர்ந்து சுற்ற‌ முடியாது த‌ழுவி அன்பை சொல்ல‌ முடியாது. ச‌மூக‌ பார்வை மாறி போயிருக்கும்

 

அழ‌குதான் வாழ்க்கை ஜூன் 13, 2009

கோப்பு வகை: Uncategorized — bashakavithaigal @ 7:06 பிற்பகல்

இன்று என் முழு
தாக‌ம் தீர்த்த‌து
உன் உத‌ட்டிலிருந்த‌
ஒரு துளி நீர்!
/********************************************************************/

பிற‌ந்த‌ நாள் உனக்கு
சிவ‌ப்பு நிற‌ சேலை சுற்றி
ப‌ரிசு த‌ந்தாய் என‌க்கு
உன்னை!

/********************************************************************/

போர்த்தும் ஒவ்வொரு முறையும்
அத‌ன் வாச‌த்தால் சொல்கிற‌து
எனக்கான‌ உன் பிரிய‌ங்களை
நீ துவைத்து கொடுத்த‌ என்
அழுக்கு போர்வை!

/********************************************************************/

க‌ட‌ல்ம‌ண‌ல் குவித்து
சிற்பிக‌ள் சுற்றி
‘என் காத‌ல் க‌ண‌வ‌னுக்கு’
என்றெழுதிய‌ த‌ட‌ம்
இன்றும் இருக்கிற‌து
என் இத‌ய‌ ஆழ‌த்தில்!

/********************************************************************/

அழ‌குதான் வாழ்க்கை நீ
அருகிலிருக்கும் நிமிட‌ங்க‌ளில்
அழ‌குதான் வாழ்க்கை நீ
தொலைந்த‌ க‌ண‌ங்க‌ளில்
உன்னைத் தேடும்
என் துடிப்பில்!

 

பிரிவு மே 2, 2009

கோப்பு வகை: கவிதைகள் — bashakavithaigal @ 10:36 மு.பகல்

lllll

ஆள‌ர‌வ‌ம‌ற்ற‌ தெருவில்
த‌ழுவி ம‌றையும்
பிற்ப‌க‌ல் வெயிலாய்
அந்த‌ பிரிவு நிக‌ழ்ந்துவிட்ட‌து
பிரிவென்ப‌து ஒரு தொட‌க்க‌ம்
பிற‌கு ஒரு ச‌ட‌ங்கு
பிற‌கு ஒரு வ‌லி
பிற‌கு ஒரு மௌன‌ம்
பின்பு ஏதுமில்லை
விட்டு தொலைந்த‌
ம்று நாளில்
கூழாங்க‌ற்க‌ளின் நிற‌த்தை
தாங்கி செல்லும் ந‌தியாய் இருப்பேன்
என‌து திசைக‌ள் அந்த‌
க‌ற்க‌ளின் முக‌ங்க‌ளில் செதுக்க‌ப்ப‌ட்டிருக்கும்.
பிரிதொரு நாள்
பிரிதொரு தெரு
பிரிதொரு வான‌ம்
இடைக்கால‌த்தில் அடைக்க‌ல‌ம் த‌ந்த‌வ‌ர்க‌ளே, த‌ந்த‌வைக‌ளே
ந‌ன்றிக‌ள் ப‌ல‌!!!!

 

என் சிறைவாச‌ம் மார்ச் 7, 2009

கோப்பு வகை: கவிதைகள் — bashakavithaigal @ 8:23 பிற்பகல்

sss2

இன்று
முத‌ல் முறைய‌ல்ல‌
எண்ணிக்கை முடிந்து வ‌ழியும்
ஒரு மாலையில் மீண்டும்
ந‌ட‌த்தி விட்டாய்.
விவாத‌ முடிவில் தொடங்கும்
நீண்ட‌ மௌன‌த்தில்
இற‌ந்து போயிருந்தாய்
நாளை மீண்டுமொருமுறை
உன்னை உயிர்பிப்ப‌தாய்
உன் திசைக‌ள் தேட‌த் துவ‌ங்குவேன்
தொட‌ரும் இந்த‌ விளையாட்டை
தின்று நீ ஜீவித்திருக்கிறாய்
விளையாட்டை விட்டு வில‌கும்
என் தார்மீக‌ உரிமையை
என் பேர‌ன்பு க‌ட‌ல் ஒளிக்க‌
அத‌ன் அடி ஆழ‌த்தில்
தொலைந்தே போகிறேன்

 

IT-இம்சிக்கும் துறை பெப்ரவரி 22, 2009

கோப்பு வகை: கற்றது கணிப்பொறியிய — bashakavithaigal @ 9:46 மு.பகல்

இப்பொழுது தெரிந்ததா….தெரிந்த‌தா…..வீட்டு வாட‌கை உய‌ர்ந்த‌துக்கு கார‌ண‌ம்,விலைவாசி உய‌ர்ந்த‌துக்கு கார‌ண‌ம்…அதுக்கு கார‌ண‌ம்….இதுக்கு கார‌ண‌ம் க‌டைசியில் உங்க‌ள் காலை க‌ட‌ன் செலுத்த‌ முடியாத‌த‌ற்கு கார‌ண‌ம் வ‌ரை அடுக்கி அந்த‌ அப்பாவி மென்பொருள் துறையின‌ரை குற்ற‌ம் சாட்டினீர்க‌ளே இப்போது தெரிந்த‌த‌தா அவ‌ர்க‌ள் த‌ங்க‌ சித்திர‌வ‌தை கூட‌த்தில் கொத்த‌டிமை கூலிக‌ள் என்று.அவ‌ர்க‌ளுக்கு எல்லாம் நீங்க‌ள் நினைப்ப‌து போல் வாழ்க்கை ம‌ல‌ர் பாதையை அமைத்து த‌ர‌வில்லை. இழ‌ப்ப‌த‌ற்கு அவ‌ர்க‌ள் தெரிந்தோ தெரியாம‌லோ த‌யாராக‌ இருந்தார்க‌ள். எளிய‌ உதார‌ண‌ம் காலை சூரிய‌ன்,அல்ல‌து ந‌ட்ச‌த்திர‌த்தை க‌டைசியாக‌ எப்பொழுது பார்த்தீர்க‌ள் என்று அவ‌ர்க‌ளை கேளுங்க‌ள் ம‌ல‌ங்க‌ ம‌ல‌ங்க‌ முழிப்பார்க‌ள்.அதுதான் அவ‌ர்க‌ள் வாழ்க்கை எப்போதும்.
இப்பொழுதுதான் அவ‌ர்க‌ளின் த‌ற்கொலை செய்தி த‌லைப்பு செய்தியாயிருக்க‌ வேண்டும்.இத‌ற்கு முன்பும் இப்படி நிக‌ழ்ந்திருக்கிற‌து ஆனால் அப்போது அவை செய்தியாக்க‌ப்ப‌ட்ட‌தில்லை. ந‌ல்லா உங்க‌ளுக்கு வேணும்டா என்று நீங்க‌ள் ஆன‌ந்த‌ப‌டும் நேர‌த்தில் அவ‌ர்க‌ள் இப்போது என்ன‌ செய்துகொண்டிருக்கிறார்க‌ள் என்று பார்ப்போம்.

கேம்ப‌ஸில் அல்ல‌து ஒப்ப‌ன் இண்ட‌ர்வியுவில் கிடைத்து க‌ல‌ர் க‌ன‌வுக‌ளோடு வேலைக்கு செல்ல‌ காத்திருப்போர்,அமெரிக்க‌ க‌ன‌வுக‌ளோடு எம்ப‌ஸி வாச‌லில் காத்து இருப்போர்,ப‌த்து ஆப‌ர்க‌ளுட‌ன் அடுத்த‌ வேலைக்கு எக்க‌ச்ச‌க்க‌ ச‌ம்ப‌ள உய‌ர்வுட‌ன் இருப்போர்,டால‌ரில்,ப‌வுண்டில்,திர்ஹாமில் ச‌ம்பாதித்து கிட்ட‌த்த‌ட்ட‌ இந்திய‌ வாழ்க்கையை ம‌ற‌ந்தோர் என‌ ப‌ல‌ வ‌ர்க்க‌ங்க‌ளாக‌ இருந்த‌ இந்த‌ இன‌ம் இன்று
1) வேலை தேடுப‌வ‌ர்
2) வேலை இழ‌ந்து விர‌க்தியின் விளிம்பிலிருப்ப‌வ‌ர்
3) வேலை இழ‌ப்பு எப்போது வேண்டுமானாலும் நேரலாம் என்ற‌ நிலையிலிருப்போர் என்ற‌ நிலையில் சுருங்கி விட்ட‌து.

இவ‌ர்க‌ளில் ப‌ல‌ர் வீட்டுக்க‌ட‌ன்,கார் க‌ட‌ன்,க‌ல்வி க‌ட‌ன்,இத‌ர‌ ப‌ல‌ க‌ட‌ன்க‌ளை வாங்கி க‌ட‌ன்கார‌ர்க‌ளாக‌ திணிக்க‌ப்ப‌ட்ட‌ கார்ப்ப‌ரேட் க‌லாச்சார‌த்தின் ப‌லி க‌டாக்க‌ளாக‌ அலைந்துகொண்டிருக்கிறார்க‌ள்.

இன்று ப‌ணி நீக்க‌ம் செய்ய‌ ப‌ல‌ குறுக்கு உபயாங்க‌ளை நிறுவ‌ன‌ங்க‌ள் கையாள‌ ஆர‌ம்பித்துவிட்ட‌ன‌.பத்து ந‌ப‌ர்க‌ள் பார்க்கும் வேலையை ஒருவ‌ருக்கு த‌ந்து ஒரு மாத‌ ப‌ணியை இரண்டு நாளில் முடிக்க‌ சொல்வ‌து,என்ன செய்வ‌து என்று சொல்லாம‌லேயே(உதார‌ண‌மாக‌ வெற்று காகித‌த்தை கொடுத்து) இதில் இருப்ப‌தையெல்லாம் முடித்து கொடுக்க‌ சொல்வ‌து,ரேட்டிங் என்று கொடுக்க‌ப்ப‌டும் வ‌ருடாந்திர‌ நிக‌ழ்வுக‌ளில் இந்த‌ வ‌ருடம் யாருக்கும் முத‌ல் ராங்க் இல்லை என்று முடிவு க‌ட்டுவ‌து இன்னும் மோச‌மாக‌ காஸ்ட் க‌ட்டிங் என்ற‌ பெய‌ரில் 7 ம‌ணிக்கு மேல் ஏசியை நிறுத்துவ‌து,லிப்ட்டை நிறுத்துவ‌து,க‌ழிப்ப‌றை காகித‌ங்க‌ளை முட‌க்குவ‌து என்று போய்கொண்டிருக்கிற‌து.

மேற்சொன்ன‌ செய‌ல்க‌ளால் மென்பொருள் துறையை துற‌க்க ப‌ல‌ர் த‌யாராகி வ‌ருகிறார்க‌ள்.குறிப்பாக‌ அர‌சாங்க‌ சம்ப‌ள உய‌ர்வுக்கு பின்னால் ச‌ம்பள‌ வித்தியாச‌ம் பெரும‌ள‌வு குறைந்து விட்ட‌து.ப‌ல‌ர் அர‌சாங்க‌த்தின் க‌த‌வுக‌ளை த‌ட்ட‌ ஆர‌ம்பித்துவிட்டார்க‌ள்.இன்னும் சில‌ர் வியாபாரம் செய்ய‌ உத்தேசித்துள்ளார்க‌ள்.பெண் வீட்டார் மென்பொருள் துறை என்றாலே காத‌ தூர‌ம் ஓடுகிறார்க‌ள்.

மாற்ற‌ம்தான் வாழ்க்கை.மாறுவ‌த‌ற்கு த‌யாராக‌ இருப்ப‌வ‌ர்க‌ள்தான் தாக்குபிடிக்கிறார்க‌ள்.
ஆத‌லால்
1) ப‌ணி நீக்க‌ம் செய்ய‌ப்ப‌ட்டால் உங்க‌ளை குறைத்து ம‌திப்பிட்டுகொள்ளாதீர்க‌ள். உங்க‌ள் ஆற்ற‌லுக்கு அந்த‌ நிறுவ‌ன‌ம் ஏற்ற‌த‌ல்ல‌ என்று முடிவு செய்யுங்கள்.

2) ந‌ண்ப‌ர்க‌ள் உற‌வின‌ர்க‌ளை பார்த்து ந‌டுங்க‌ தேவையில்லை.சாப்ட்வேர் துறையில் இதெல்லாம் ச‌க‌ஜ‌ம‌ப்பா என்று ந‌கைச்சுவையாய் சொல்லி விடுங்க‌ள்.

3)சிக்க‌ன ந‌ட‌வ‌டிக்கையை கையாண்டு பெற்றோர்க‌ளின் ,உற‌வின‌ர்க‌ளின், ந‌ண்ப‌ர்க‌ளின் உத‌வியை கூச்ச‌மில்லாம‌ல் ஏற்றுகொள்ளுங்கள். ந‌ம‌து ச‌மூக‌ அமைப்பு ந‌ம்மை காப்பாற்றும்

4)உட‌ல் ந‌ல‌னை பேணுங்க‌ள் விட்டு போன‌ த‌னிப்ப‌ட்ட‌ வேலையை முடியுங்க‌ள்

5) அடுத்து என்ன‌ செய்ய‌லாம் என்று ஆலோச‌னை செய்யுங்க‌ள் இக்க‌ட்டான‌ சூழ‌லில் மீண்டு வ‌ருப‌வ‌ரே சாத‌னையாள‌ர்

ம‌றுப‌டி பொருளாதார‌ம் முன்னேறும் நிலையில் மென்பொருள் துறைக்கு ஆள் ப‌ற்றாக்குறை ஏற்ப‌டும். க‌ச‌ப்பான‌ அனுப‌வ‌ங்க‌ளால் ப‌ல‌ர் இத்துறைக்கு திரும்ப‌ வ‌ர‌ த‌யாராக‌ இருக்க‌ மாட்டார்க‌ள்.இப்பொழுது செய்யும் செய‌ல்க‌ளுக்கு மென்பொருள் நிறுவ‌ன‌ங்க‌ள் அத‌ற்கான‌ ப‌ல‌னை அடைந்தே தீரும்.2001 ல் இச்செய‌ல்க‌ளை செய்த‌ நிறுவ‌ன‌ங்க‌ள் பெரும‌ள‌வு பின்ன‌ர் அடையாள‌ம் தெரியாம‌ல் அழிந்துவிட்ட‌து.வ‌ர‌லாறு மிக‌ முக்கிய‌ம் ம‌ங்குனி பாண்டிக‌ளே!!!!!!!

 

நான் க‌ட‌வுள்(ம‌ர‌ண‌த்தின் இர‌க‌சிய‌ம்) பெப்ரவரி 15, 2009

கோப்பு வகை: கருவறையிலிருந்து கல — bashakavithaigal @ 2:44 மு.பகல்

“ந‌சிகேதா இந்த‌ உல‌க‌த்தில் உள்ள செல்வ‌ங்க‌ளையெல்லாம் கேள், நீண்ட‌ ஆயுளை கேள், ஆனால் ம‌ர‌ண‌த்தின் இர‌க‌சிய‌த்தை ம‌ட்டும் கேட்காதே”

“அழியும் பொருளும் தேய்ந்து போகும் வாழ்க்கையும் வேண்டாம் ஆதலால் ப‌ய‌ன் இல்லை.ஆனால் ம‌ர‌ண‌த்தின் இர‌க‌சிய‌த்தை கூறும் வ‌ரைக்கும் விட‌ப்போவ‌தில்லை”

பின் எம‌ன் ந‌சிகேத‌னிட‌ம் ம‌ட்டும் கூறிய‌ இர‌க‌சிய‌ம் ஜெய‌மோக‌னுக்கும் தெரிந்த‌தோ என எண்ணும்ப‌டி

 ”வாழ‌ கூடாத‌வ‌ங்க‌ளுக்கு நான் அளிக்கும் த‌ண்ட‌ணை ம‌ர‌ணம் .

வாழ‌வே முடியாத‌வ‌ங்க‌ளுக்கு நான் அளிக்கும் த‌ண்ட‌ணை வ‌ர‌ம்” என்ற‌ இர‌ட்டை வ‌ரிக‌ளில் க‌தையின் க‌ள‌ம் எழுப்ப‌ப‌ட்டிருக்கிற‌து.

பாலாவின் பட‌ங்க‌ள் பொதுவாக‌ ஒரு ந‌ல்ல‌ இல‌க்கிய‌ நாவ‌ல் ப‌டித்த‌ திருப்தியை எப்பொழுதும் எனக்குள் ஏற்ப‌டுத்தியிருக்கிற‌து.க‌தையையோ ப‌ட‌த்தையோ விம‌ரிச‌ன‌ம் செய்யாம‌ல் இந்த‌ ப‌ட‌ம் என‌க்குள் கிள‌றி விட்ட‌ இல‌க்கிய‌ ஞாப‌க‌ங்க‌ளை ப‌திவு செய்ய‌வே இங்கு நான் விழைகிறேன். இத‌ற்கு முன் வ‌ந்த‌ பிதாமக‌ன் ஜெய‌காந்த‌னின் ந‌ந்த‌வ‌ன‌த்தில் ஒரு ஆண்டியை நினைவுப‌டுத்திய‌து என்றால் நான் க‌ட‌வுள் MT வாசுதேவ‌ன் நாய‌ர் எழுதிய‌ வார‌ணாசியையும் த‌க‌ழி எழுதிய‌ பிச்சைகார‌ர்க‌ள் நாவ‌லையும் நினைவுப‌டுத்திய‌து.இதில் க‌தையின் மூலமான ஏழாம் உல‌க‌த்தை ப‌டிக்கும் ஆவ‌லில் உள்ளேன்.

லௌதீக‌ வெளியில் காசியில் அலைந்து திரிந்து பின் பல‌ ஊர்க‌ள் க‌ட‌ந்து, மீண்டும் 60ஐ க‌ட‌ந்த‌ வ‌ருட‌ங்க‌ளில் காசி செல்லும் ச‌ந்த‌ர்ப்ப‌த்தில் ம‌ன‌தை காலி பாத்திர‌மாக‌, சூன்ய‌மாக‌ வைத்து ம‌ர‌ண‌த்தை, ந‌ண்ப‌ர்க‌ள் உற‌வினெர்க‌ளும் க‌ட‌ந்து போகும் ம‌னித‌ர்க‌ளை எந்த‌ ச‌ல‌னுமும் இல்லாம‌ல் வேடிக்கை பார்க்கும் வார‌ணாசி க‌தை நாய‌க‌ன் சுதாக‌ர‌னும், ப‌ட‌த்தின் நாயக‌ன் ருத்ர‌னும் ஒன்றாக‌வே தெரிகிறார்க‌ள்.

பிச்சைகார‌ர்க‌ளின் உல‌க‌த்தை ஆழ‌ சென்று காட்டிய‌ முத‌ல் ப‌ட‌ம் நான் க‌ட‌வுள் என்றால் நான் ப‌டித்த‌வ‌ரை பிச்சைகார‌ர்க‌ளின் அவ‌ல‌த்தை முத‌லில் அதிர‌ அதிர‌ ப‌திவு செய்த‌து த‌க‌ழியின் பிச்சைகார‌ர்க‌ள் நாவ‌ல். முத‌லாம் குலோத்துங்க‌ சோழ‌ன் இர‌ண்டாம் குலோத்துங்க‌ சோழ‌ன் என்று நாம் தெரிந்த‌ வைத்திருக்கும் ச‌ரித்திர‌ம் போல் ஒரு ஆல‌ ம‌ர‌த்தின் கீழ் ஒதுங்கி வாழ்ந்து ஒரு மாலை பொழுதில் மொத்த‌மாக‌ காணாம‌ல் போய் பின்னொரு ம‌ர‌த்தில் அல்ல‌து கூட்ட‌த்தை குடும்ப‌மாக‌ ஏற்றுகொள்ள‌ பழ‌க்க‌ப்பட்ட‌ ம‌னித‌ர்க‌ளீன் வாழ்க்கையையும் வ‌ர‌லாறாக‌ ப‌திவு செய்திருக்கிற‌து இந்த‌ புத்த‌க‌ம். ச‌முதாய‌த்தில் ச‌ராச‌ரியாக‌ வாழும் ம‌னித‌ர்க‌ளின் வாழ்க்கை முறையை வாழ‌ ஆசைப்ப‌டும் அபிலாசைக‌ளை வ‌லி நிறைந்த‌ ந‌கைச்சுவையாக‌ நான் க‌ட‌வுளில் வ‌ரும் பிச்சைக்கார‌ர்க‌ள் பிர‌திப‌லித்தார்க‌ள் என்றால், பிச்சைக்கார‌ர்க‌ள் நாவ‌லில் சராச‌ரி உல‌க‌த்தின் க‌த‌வுக‌ளை திற‌க்க‌ திரும்ப‌ திரும்ப‌ த‌ட்டும் இளைஞ‌ன் ஒரு கட்ட‌த்தில் முடியாம‌ல் தோல்வி அடைவ‌த‌ன் அடையாள‌மாக‌ க‌தை முடிகிற‌து.த‌க‌ழியால் க‌தையின் நாயக‌னை வாசுதேவ‌ன் நாய‌ரின் காசியில் நுழைத்து வாழ‌ தெரியாத‌ அவ‌னுக்கு ம‌ர‌ண‌ம் என்னும் வ‌ர‌ம் த‌ர‌ இய‌லாத‌தை பாலா என்னும் மேதை நான் க‌ட‌வுளில் செய்திருக்கிறார்!!!!!!!!

 

க‌விதைக‌ள் டிசம்பர் 8, 2008

கோப்பு வகை: கவிதைகள் — bashakavithaigal @ 1:25 மு.பகல்

இறுக்கி அனண‌த்து
இத‌ழ் இணைத்தாய்
ந‌ம்முள் நிர‌ம்பிய‌து
ந‌ம் உயிர்!
/*****************************************************************************/
“ம்மியாவ்…ம்மியாவ் பூனேக்குட்டி…”
குழ‌ந்தையை கொஞ்சுகிறாய்.
குழ‌ந்தையாய் உன்ன‌ருகில்
நான்!
/*****************************************************************************/
ஒரு குளிர் இர‌வில்
ந‌ட்ச‌த்திர‌ங்க‌ள் ப‌தித்த‌
க‌ருவான‌ம் போர்த்திய‌
மொட்டை மாடியில்
நீண்ட‌ மின்வெட்டென‌
சுவ‌ற்றின் அந்த‌
முனையில் நீயும்
இந்த‌ முனையில் நானும்
வான‌ம் பார்த்து அம‌ர்ந்திருந்தோம்
அருகிலிருந்த‌ ஒற்றை ந‌ட்ச‌த்திர‌ம்
ந‌ம்மை பார்த்து
க‌ண் சிமிட்டிய‌து!
/*****************************************************************************/
நீ
ந‌ம்மை பிரிக்கும் எந்த‌
பாதைக‌ளின் திருப்ப‌ங்க‌ளிலும்
என்னைப் பார்க்கும் பொருட்டு
திரும்பிய‌தில்லை
நான்
ந‌ம்மை பிரித்த‌ திருப்ப‌ங்க‌ளில்
தென்ப‌டுவாயென‌ திரும்ப‌ திரும்ப‌
திரும்பிகொண்டிருக்கிறேன்!
*****************************************************************************/

 

க‌ம்யூட்ட‌ர் கூலிக‌ளே….காசு ப‌த்திர‌ம் நவம்பர் 15, 2008

கோப்பு வகை: கற்றது கணிப்பொறியிய — bashakavithaigal @ 3:39 பிற்பகல்

“ஏம்பா த‌ர‌க‌ரே….செல்ல‌மா வ‌ள‌த்த‌ பொண்ணு க‌ம்யூட்ட‌ர் இஞ்சினிய‌ரெல்லாம் வேண்டாம் ஏதாவ‌து காய்க‌றி விக்கிற‌ வ‌ர‌ன் இருந்தா சொல்லு” என்று எங்கோ ப‌டித்த‌து ந‌கைச்சுவையாய் இருந்தாலும் இதேபோல் ஒன்று நிஜ‌மாய் என‌க்கு ந‌ட‌ந்த‌து. 2001ல்(இதே போல் ஒரு நிலை அமெரிக்காவில் இருந்த‌ கால‌ க‌ட்ட‌த்தில்) பெங்க‌ளூரில் வீடு தேடி அலையும்போது வீட்டு சொந்தக்கார‌ர்க‌ள் க‌ம்யூட்ட‌ர் க‌ம்பெனியா வாட‌கை ஒழுங்கா த‌ருவியா என்று மிர‌ட்டினார்க‌ள்.அத‌ற்கு பிற‌கு வ‌ந்த‌ வ‌ருட‌ங்க‌ளில் இராஜ‌ ம‌ரியாதை கிடைத்தாலும் எப்போனாலும் ச‌ங்குதூவானுங்க‌ என்று கொஞ்ச‌மாவ‌து சேமிக்கும் ப‌ழ‌க்க‌ம் பிற்பாடு ஏற்ப‌ட்ட‌து.அமெரிக்கர்க‌ளுக்கும் இந்திய‌ர்க‌ளுக்கும் முக்கிய‌மான‌ ஒரு வித்தியாச‌ம் அமெரிக்க‌ர்க‌ள் சேமிப்ப‌தில் அவ்வ‌ள‌வாக‌ ந‌ம்பிக்கை இல்லாத‌வ‌ர்க‌ள் இந்திய‌ர்க‌ள் அனாவ‌சிய‌மாய் செல‌வ‌ழிப்ப‌தில் ந‌ம்பிக்கை இல்லாத‌வ‌ர்க‌ள் என்ப‌துதான். 21/22 வ‌ய‌தில் சம்பாதிக்க‌ தொட‌ங்கும் இந்திய‌ த‌லைமுறை அப்ப‌டி ஒன்றும் கெட்டு போன‌தாக‌ தெரிய‌வில்லை.கலாச்சார‌ சீர‌ழிவுக‌ளுக்கு க‌ம்யூட்ட‌ர் ஆசாமிக‌ளை குறை சொல்ப‌வ‌ர்க‌ள் க‌ம்யூட்ட‌ நுழைவ‌த‌ற்கு முன்னால் மெரீனா பீச்சில் புனித‌மான‌ காத‌ல்க‌ள் ம‌ட்டுமே அர‌ங்கேறியிருந்த‌தா என்று சொல்ல‌ வேண்டும். கை நிறைய‌ ச‌ம்ப‌ள‌த்தை பார்த்து ஒரு வ‌ருட‌ம் இர‌ண்டு வ‌ருட‌ம் ஆடுப‌வ‌ர்க‌ள் அத‌ற்கு பின் நிறைய‌ சேமிப்பில் நாட்ட‌ம் காட்டுகிறார்க‌ள் என்ப‌துதான் ந‌டைமுறை உண்மை.க‌ம்யூட்ட‌ர் ப‌ணி என்ப‌து க‌ண‌வ‌ன் ம‌னைவி பந்த‌ம் போல் அல்ல‌. அது இருப‌க்க‌ங்க‌ளிலும் இலாப‌ நோக்கில் ந‌டைபெறும் ஒரு தின‌ச‌ரி அலுவ‌ல். பிராஜ‌க்ட் இல்ல‌ அத‌னால் இந்த‌ வ‌ருட‌ம் ச‌ம்ப‌ள‌ உய‌ர்வு இல்லை என்று இந்த‌ வருட‌ம் நிறுவ‌ன‌ங்கள் நாக்கு துருத்தினாலும், “கைல‌ ப‌த்து ஆ:பர் இருக்கு ச‌ம்ப‌ள‌ம் இர‌ண்டு ம‌ட‌ங்கா உய‌ர்த்த‌ர‌தா இருந்தா பேச்சு வார்த்தைக்கு யோசிக்கிறேன்!” என்று போன‌ வ‌ருட‌ம்வ‌ரை பிலிம் காட்டிய‌தையும் ம‌ற‌க்க‌ கூடாது. உல‌க‌ம‌ய‌மாக்க‌லின் ப‌ல‌ன்க‌ள் ம‌ட்டும் வேண்டும் ந‌ஷ்ட‌ங்கள் வேண்டாம் என்று சொல்வ‌து அறிவுடைமை ஆகாது.
ம‌ழை கால‌த்திற்காய் உணவு சேமிக்கும் எறும்பை போல் எந்த‌ சிக்க‌ல் வ‌ந்தாலும் அடிப்ப‌டை தேவைக‌ள் ஆட்டம் காணாத‌ அள‌வுக்கு அக்க‌வுண்டில் ப‌ண‌ம் இருந்தால்(குறைந்த‌ ப‌ட்ச‌ம் ஒரு வ‌ருட‌ம் தாக்கு பிடிக்க‌) த‌ப்பி பிழைப்போம்.இது த‌விர‌ என‌க்கு தெரிந்த‌ வேறு வழிக‌ள்
1)குர‌ங்காட்ட‌ம் க‌ம்பெனி க‌ம்பெனியா தாவும்போது அந்த‌ர‌த்தில் தொங்கும் பிராவிட‌ண்ட் ப‌ண்டுக‌ளில் போட்ட‌ ப‌ண‌த்தை திரும்ப‌ எடுக்க‌ வ‌ழி முறைக‌ளை யோசிக்க‌லாம்
2) மார்ச் முத‌ல் வார‌த்தில்  யோரோ சொல்லி எவ‌ரோ நீட்டிய‌ ப‌டிவ‌த்தை நிர‌ப்பி வ‌ருமான‌ வ‌ரிக்காக‌ சேமித்த‌ ப‌த்திர‌ங்களை ,சேமிப்புக‌ளை தேடிப் பிடித்து அதில்  கை வைக்கலாம்.
3) வார‌ இறுதி பார்ட்டிக‌ளுக்கு சில‌ ஆயிர‌ங்க‌ளில் செய்யும் ம‌துபான‌ சைட் டிஷ் செல‌வின‌ங்களை நிறுத்தி விட்டு ப‌ற‌க்கும் இர‌யிலில் மெரீனா வ‌ந்து கிரிக்கெட் விளையாடி செல்ல‌லாம்.
4)ஐபோட்,புளுபெர்ரி என்று காத‌லிக்கும்,கேர்ள் பிர‌ண்டுக்கும் காசு செல‌வ‌ழிப்ப‌வ‌ர்க‌ள் “அலைபேசி ஒலியெல்லாம் உன் குரலாக‌….” என்று க‌விதை எழுதி ப‌ழ‌க‌லாம் காத‌லி தெரித்து ஓடினால் காத‌லுக்கு ஒரு இடைவேளை விட்டு சொந்த‌ ஊர்க‌ளுக்கு அவ்வ‌ப்போது சென்று சுற்ற‌த்தையும் ந‌ட்பையும் பார்க்க‌லாம்.
5)தெரு முனைக்கும் ஸ்டைலாக‌ ஆட்டோ என்ற‌ழைப்ப‌வ‌ர்க‌ள் முடிந்த‌ ம‌ட்டும் வாக‌ன‌ங்களை த‌விர்த்து விட்டு ந‌ட‌ந்து நிறைய‌ கொழுப்புருக்க‌லாம்.
6) எத‌ன்பொருட்டு எவ‌ருக்காக‌ என்று தெரியாம‌ல் பொழுதை க‌ழிக்க‌  ஷாப்பிங் மால்களில் ச‌க‌ட்டுமேனிக்கு அள்ளி இறைத்த‌வ‌ர்க‌ள் நிலா வழியும் இரவில் அலை விர‌ல் தொடும் தூர‌த்தில் அமைதியாக‌ அம‌ர்ந்து இய‌ற்கையை இர‌சிக்க‌லாம்
7) இது த‌விர‌ பெரிதாக‌ வீடு,கார் மற்றும் அடிப்ப‌டை தேவைக‌ளுக்கு அப்பாற்ப‌ட்ட‌ விஷ‌ய‌ங்க‌ளை வாங்குவ‌தை த‌விர்க்கலாம்.

 2000,2001 அடி வாங்கிய‌ க‌ணிப்பொறி துறை மாண்டு விட‌வில்லை. வீறிட்டு எழுந்த‌து. க‌ணிப்பொறி துறை இந்தியாவை ஆக்கிர‌மிப்ப‌த‌ற்கு முன்னால் த‌ங்க‌த்தை அட‌கு வைத்த‌ தேச‌ம் ப‌த்து வ‌ருட‌ங்க‌ளுக்கு பிற‌கு கேத்ரீனா புய‌ல் அமெரிக்காவை தாக்கிய‌ போது பெரும் நிவார‌ண‌ம் டால‌ர் தேச‌த்திற்கே வ‌ழ‌ங்கும் அள‌வுக்கு உய‌ர்ந்து நின்ற‌து.
இர‌வுக்கு பின்னால் எப்போதும் ஒரு ப‌க‌ல் உண்டு க‌ண்ணை இறுக்க‌ மூடி இருள் என்று கூவினாலும்!!!!

 

கோல‌ம் நவம்பர் 8, 2008

கோப்பு வகை: Uncategorized — bashakavithaigal @ 11:22 மு.பகல்

இன்னும் சில‌ நொடிக‌ளோ,
நிமிட‌ங்க‌ளோ,நாட்க‌ளோ
விமான‌ ப‌ய‌ண‌த்தில் இருக்கும் ம‌க‌னுக்கோ
ப‌ள்ளி இறுதியாண்டு தேர்வு எழுதும் பேத்திக்கோ
இறுக்கி பிடித்து வைத்திருக்கும் உயிர்
செய‌ற்கை சுவாச‌ க‌ருவியினோடே
க‌சிந்துகொண்டிருக்கிற‌து….
வெறித்த‌ ஜ‌ன்ன‌ல் வ‌ழி பார்வையில்
நேற்று யாரோ இட்ட‌ க‌ல‌ர் கோல‌ம்
காற்றில் சிறிது சிறிதாக‌
க‌லைந்துகொண்டிருக்கிற‌து!

 

ம‌ச்சான் ஊரு ம‌துரை! நவம்பர் 8, 2008

கோப்பு வகை: ந‌க‌ர‌ங்க‌ள் — bashakavithaigal @ 10:48 மு.பகல்

இந்த‌ ப‌குதியின் நோக்க‌ம் ந‌க‌ர‌ங்க‌ளை அத‌ன் பிர‌மாண்ட‌ங்க‌ளை விள‌க்குவ‌த‌ல்ல‌.என் பார்வையில் விரியும் அத‌ன் திசைகளையும் அத் திசைக‌ளில் ந‌ட‌ந்த‌ என் கால் த‌ட‌ங்க‌ளையும் ப‌திவு செய்வ‌தே இத‌ன் நோக்க‌மாக‌ இருக்குமோ??

க‌ல் தோன்றி ம‌ண் தோன்றா கால‌த்துக்கு முன் தோன்றிய‌ முத‌ல் மெட்ரோ சிட்டி என்று அழைக்க‌லாமா? நான் இங்கு பிற‌ந்த‌தால் அப்ப‌டித்தான் அழைக்க‌ப்பட‌ வேண்டும்.செயிண்ட்மேரீஸ் ப‌ள்ளியின் பின்புற‌முள்ள‌ ச‌ர்ச்சுக்கு சொந்த‌மான‌  வ‌ரிசை வீடுக‌ளில் இருக்கும் ஒரு வீட்டில் என் பாட்டியின் இராஜாங்க‌ம் ந‌ட‌ந்து வ‌ந்த‌து. க‌லெக்ட‌ர் ஆபிசில் குமாஸ்தாவாக‌ வேலை பார்த்து
ஆனை மேய்ச்ச‌ ப‌ர‌ம்ப‌ரையாக்கும்(!) என‌ ப‌ழ‌ம்பெருமைக‌ள் பேசி மோதிர‌ம் விற்று மீன் வாங்கி ச‌மைக்கும் ஒரு சூழ் நிலையில் ஒரு கூட்டு குடும்ப‌த்தில் என் வ‌ள‌ர்ப்பு ந‌ட‌ந்த‌து. ஏதொ ஒரு பெரிய‌ம்மா வீட்டில் உண்டு மாமா வீட்டில் மாலை பொழுதை போக்கி ,இன்னொரு பெரிய‌ம்மா வீட்டில் உற‌ங்கி வ‌ள‌ர்ந்த‌ வ‌ள்ர்ப்பாத‌லால் அமெரிக்காவில் மிக‌ கொடுமையாக‌ த‌னிமையை உண‌ர்ந்திருப்பேன் என்ற‌ முடிவுக்கு வ‌ர‌ வேண்டிய‌தாயிருக்கிற‌து.சுருங்க‌ கூறின் நிறைய‌ அன்பால் நான் த‌ழும்ப‌ த‌ழும்ப‌ நிறைக்க‌ப்ப‌ட்டேன்.

 அன்பு என்ற‌தும் அத‌ன் தொட‌ர்பான‌ காத‌ல் நினைவுக்கு வ‌ருகிற‌து.5 வயதாயிருக்கும்போது இடுப்பில் தூக்கி வைத்துகொண்டு திரியும் வேணியை(அக்கா!!!!!) இன்னும் நினைவு இருக்கிற‌து.அத‌ன் பாதிப்போ என்ன‌வோ இடை அமைந்த‌ பெண்களை பார்த்து என்ன‌ தூக்கிக்கோ என்று இரு க‌ர‌ம் நீட்டி
குழ‌ந்தையாய் ஓட‌ தோன்றுகிற‌து.அத‌ன் பிற‌கு ஒவ்வொரு வ‌குப்பு க‌ட‌க்கும்போதும் ஒவ்வொரு காத‌லியும் க‌ட‌ந்து போனாள்.காத‌லினால் மிஞ்சியவை சைக்கிள் க‌ற்றுகொண்ட‌தும்,ம‌துரையின் நிறைய‌ ப‌குதிக‌ளை தெரிந்துகொண்ட‌தும்,காத‌ல் வ‌ழியும் ஒரு சில‌ க‌விதைக‌ளும்.
காத‌லை த‌விர‌ இள‌ம்பிராய‌த்தில் சிமெண்ட் ரோட்டில் ஓணாண் பிடித்து ச‌லித்த‌ பிற‌கு, நாலு ர‌வையில் சேர்த்து வைத்த‌ தீப்பெட்டி ப‌ட‌ங்க‌ளெல்லாம் காலியான‌ பிற‌கு,கிட்டி விளையாடி ம‌ண்டை உடைத்த‌ பிற‌கு, நொண்டி விளையாட்டில் தோழிக‌ளை துர‌த்தி கால் வ‌ழித்த‌ பிற‌கு கிரிக்கெட் அறிமுக‌மாகிய‌து.உப்புக்கு ச‌ப்பாணியாய் தெரு அண்ண‌ன்மார்க‌ளால் தெப்ப‌க்குள‌த்துக்கு அழைத்து செல்ல‌ப்ப‌டுவ‌துண்டு.தெப்ப‌க்குள‌ம் ம‌துரையின் சிட்னி என்று சொல்ல‌லாம்.பேய் அலையும்டா என்று மிர‌ட்டும் வீட்டு பெரிய‌வ‌ர்களை அல‌ட்சிய‌ப்ப‌டுத்தி தெப்ப‌க்குள‌மே க‌தி என்று கிட‌ந்த‌ கால‌ங்க‌ள் அனேக‌ம். சிங்க‌ம் வாயிலிருந்து வ‌ழிந்து த‌ண்ணீர் நிர‌ம்பும்வ‌ரை அங்கு ந‌டைபெறும் கிரிக்கெட் போட்டிக‌ள் மிக‌ புக‌ழ்பெற்ற‌வை. அந்த‌ சீச‌னில் தெப்பகுள‌த்துகு வெளியே அடிக்க‌ப்ப‌டும் சிக்ச‌ர் வ‌ருட‌ம் முழுவ‌தும் பேச‌ப்ப‌டும்.
குட்டிச்சுவ‌ர்.போர் ஒத்திகை போல் அடுத்த‌  நாள் கிரிக்கெட்டிற்கு தேவையான‌ திட்ட‌ங்க‌ள் வ‌குக்க‌ப்ப‌டுமிட‌ம். இந்த‌ குட்டிசுவ‌ர் எங்க‌ள் ப‌குதியில் அமைந்த‌ ப‌ள்ளியையும் சிறுவ‌ர் சீர்த்திருத்த‌ ப‌ள்ளியையும் பிரிப்ப‌தாக‌ இருந்த‌து.அது த‌விர‌ குட்டி சுவ‌ரில் என்னெவெல்லாம் விவாதிக்க‌ப்ப‌டுமோ அவையெல்லாம் அங்கு விவாதிக்க‌ப்ப‌டுவ‌துண்டு. இன்னும் ம‌துரை செல்லும்போது அந்த‌ குட்டி சுவ‌ர் ந‌ண்ப‌ர்களை சந்திக்கும்போது நினைவுக‌ளை ப‌கிர்வ‌துண்டு.

ம‌துரையில் இன்டெர்னெட்,பீஸா,பானிபூரி,தீம் பார்க் வ‌ருவ‌துக்கு முன் சினிமா தியெட்ட‌ர்க‌ளும் மீனாட்சி அம்ம‌ன் கோயிலை ஒட்டிய‌ க‌டை வீதிக‌ளும்,அக்க‌டை வீதிக‌ளில் சிவ‌ப்பு,க‌ருப்பு தாவ‌ணியும் அத‌ற்கு மேட்சாக‌ ரிப்ப‌ன் த‌ரித்து வ‌ரும் இள‌ம் பெண்க‌ளும்,ந‌ள்ளிர‌வு தாண்டிய‌ பிற‌கும் தேனீர் க‌டைக‌ளில் கிடைக்கும் இனிப்பு ப‌ன்னும்தான் பொழுதுபோக்கு. ர‌ஜினி,க‌ம‌ல் பட‌ங்க‌ளை ச‌ட்டை கிழிந்து,க‌ம்பி கிழித்து பார்த்த‌வ‌ர்க‌ள் அந்த‌ வ‌ருட‌ ஹீரோ. நிறைய‌ முறை அப்ப‌டி ஹீரோ ப‌ட்ட‌ங்க‌ள் வாங்கி கொசுறாக‌ த‌ந்தையிட‌ம் அடியும் வாங்கிய‌துண்டு.
முத‌ன்மையாய் இருப்ப‌த‌ன் சுவையை சொல்லி கொடுத்த‌ திருஞான‌ம் ப‌ள்ளியும்,ம‌ர‌ண‌ ப‌ய‌த்தில் திரிந்த‌ கால‌ங்க‌ளில் அர‌வ‌னண‌த்த‌ சௌராஷ்டிர‌ ப‌ள்ளி ந‌ண்ப‌ர்க‌ளும் ஆசிரிய‌ர்க‌ளும்,அறிவு தாக‌த்தை இடைவிடாது என‌க்குள் ஏற்ப‌டுத்திய‌ ம‌துரை க‌ல்லூரியும் அத‌ன் பேராசிரிய‌ர்க‌ளும் என்றென்றும் போற்றுத‌லுக்குரிய‌வ‌ர்க‌ள்.
அத‌ன் பிற‌கு என் கால்க‌ள் பிழைப்ப‌த‌ற்காக‌ ப‌ல‌ ந‌க‌ரங்களை க‌ட‌ந்து விட்ட‌து.
ப‌ல‌ மாநில‌ங்க‌ள்,நாடுக‌ளில் நாடோடியாக‌ வாழ்ந்தாலும் என் ஆன்மா சுக‌ம‌டைவ‌து ம‌துரையில் ம‌ட்டுமே.