கனன்றிருக்கும் ஆசைகளில்
சிதறுகிறது ‘நான்’
கங்கையில் கரைந்தபின்பும்
கரையில் தேங்கிவிடுகிறது
சுயம் ஜனவரி 15, 2012
மோகத்தால்… ஜனவரி 15, 2012
உன் விரல்தொட்ட கணத்தில்
பற்றியது பின்பு
பெருவெளியாவும் எரித்து
காலமற்ற கணத்தில்
என் சாம்பல் இரைக்கிறது!
ஜனவரி 15, 2012
ஒரு உடலிலிருந்து
தெரியும் இருமுகங்களை
காட்டும் கண்ணாடிக்கு
தெரியாதது நம்
இடைவெளிகள்
மலையென வாழ்வு ஜனவரி 15, 2012
ஒரு இரகசியம் உடைபடும்போது
பிளவுப்பட்ட மலைகளுக்கிடையேயான
நாம் பயணிக்க முடியாத
… சாலை உருவாகி விடுகிறது
கருமை கவிழ்ந்த இடுக்குகளில்
வழியும் அதன் துயர தனிமைகள்
உனக்கு எனக்கும்
வெவ்வேறு நிறம் கொண்டவை
யாவரும் பயணித்து உறங்கும்
நிலா இரவுகளில்
நிழல்கள் மோதும் சாலையில்
பங்கிடப்படும் இரகசியங்கள்
கருஇருளில் பெருந்துளையில்
ஈர்க்கப்பட்டிருக்க கூடும்!
புலம்பெயர்ந்தவள் ஜனவரி 15, 2012
இரத்தம் தெறிக்கும் நாட்களில்
கறைகளாய் தங்கி விடுகிறது
உன் மீதான ஏமாற்றம்
நானறியா நிலத்தில்
வேறூன்றவே முயல்கிறேன்
வென்னீரையெனும் ஊற்றாதிரேன்
ஜனவரி 15, 2012
நீ
புறக்கணித்து போனபிறகும்
காத்திருக்கிறன என் கோரிக்கைகள்
திரும்பும் உன் தடங்களிலெல்லாம்
ஜனவரி 15, 2012
உருகி கடல்
வழியும் நிலவு
அம்பலப்படுத்துகிறது
என் காதோரம் கசியும்
உன் இரகசியங்களை!
நினைவு வட்டம் ஜனவரி 15, 2012
இரவின் திறப்பில்
எங்கிருந்து வெளியேறுகிறாய்
என்றறியா திகைப்பில்
இன்றைய கனவின்
முதல் புள்ளியில்
தோன்றி விட்டாய்!இரவின் திறப்பில்
எங்கிருந்து வெளியேறுகிறாய்
என்றறியா திகைப்பில்
இன்றைய கனவின்
முதல் புள்ளியில்
தோன்றி விட்டாய்!